தேடப்பட்டுவரும் முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க தாய்லாந்தில் மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்தது எவ்வாறு என்பது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
புனர்வாழ்வு வழங்கப்பட்ட புலிகள் கைது செய்யப்படுவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கேயாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உதயங்க வீரதுங்கவின் ,ராஜதந்திர கடவுச்சீட்டை இரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் டாக்டர்.ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தாய்லாந்து சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தேடப்பட்டுவரும் முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அரசால் தேடப்பட்டு வரும் உதயங்க வீரதுங்க எவ்வாறு தாய்லாந்து சென்றார் என்பது தொடர்பில் அமைச்சரவைக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
அத்தோடு அவரது இராஜதந்திர கடவுச்சீட்டு 2020 ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகவுள்ளது. இதனை இரத்து செய்யவும் தடைசெய்யவும் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை.
இக் கடவுச்சீட்டை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதோடு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
அவரை கைது செய்வதற்கும் நடவ டிக்கைகள் எடுக்கப்படும். அதேவேளை புனர்வாழ்வு வழங்கப்பட்ட புலிகள் கைது
செய்யப்படுவது அண்மையில் கண்டுபிடிக் கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக விசா ரணைகளை நடத்துவதற்கேயாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM