கொங்கோவில் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி ; 200 க்கும் மேற்பட்டோர் மாயம்!

Published By: Vishnu

28 May, 2019 | 09:47 AM
image

கொங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் உள்ள மிகப்பெரிய ஏரியில் சென்ற படகொன்றே இவ்வாறு கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

183 பேர் மாத்திரம் பயணிக்க கூடியதான படகில் 300 க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளதுடன், அளவுக்கு அதிகமாக சரக்குகளையும் ஏற்றிச் சென்றமையினால் பராம் தாங்க முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் படகில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.

காணாமல்போனவர்களை தேடும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52