(எம்.எப்.எம்.பஸீர்)
சொத்துக் குவிப்பு விவகாரத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் மொஹம்மட் ஷாபியினால் சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 16 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருணாகல் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளரிடம் இந்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக குருணாகல் பொலிஸ் நிலையத்திலும் 10 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேக நபரான வைத்தியர் சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சைகள் மேற்கொண்டதாக கிடைத்த முறைப்பாடுகளில், 4 முறைப்பாடுகள் அவருடன் சேர்ந்து பனியாற்றியதாக கூறப்படும் வைத்தியர்களால் முன்வைக்கப்பட்டவை என அறிய முடிகின்றது. ஏனைய முறைப்பாடுகளை 28 - 30 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே சொத்து குவிப்பு விவகாரத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் குறித்த வைத்தியருக்கு எதிராக குருணாகல் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பின்னணியில் குற்றச்சடடுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியகையுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM