நடிகர் அருண் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘மாஃபியா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
துருவங்கள் பதினாறு, நரகாசுரன், நாடக மேடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படத்திற்கு ‘மாஃபியா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
இன்வெஸ்டிகேட் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் கதையின் நாயகனாக அருண் விஜய் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இவர்களுடன் எதிர்நாயகனாக நடிகர் பிரசன்னா நடிக்கிறார். அஞ்சாதே, திருட்டுப் பயலே 2 ஆகிய படத்தை தொடர்ந்து இவர் வில்லனாக நடிக்கும் படம் இது. ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகையர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நடிகர் அருண் விஜய் தற்போது அறிமுக இயக்குனர் விவேக் இயக்கத்தில் ‘பாக்சர்’என்ற படத்திலும், இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் அண்டனி நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM