ஐ.எஸ். தொடர்பாக சிந்தித்து செயற்படவேண்டும் - தினேஷ்

Published By: Vishnu

27 May, 2019 | 05:22 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டாலும் அதன் அச்சுறுத்தல் இன்னும் இருந்து வருகின்றது. தேசிய தெளஹீத் ஜமாத்தை வழிநடத்த வேறு தலைவர்கள் இருப்பார்கள். அவர்களையும் கண்டுபிடிக்கவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் உயிரிழந்துள்ளமை வைத்திய பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. பயங்கரவாத அமைப்பொன்றின் தலைவர் உயிரிழப்பதென்றால், அவர் வேறு ஒருவரை அந்த அமைப்பின் தலைவராக நியமிப்பதுவே வழமையாகும். அதனால் தேசிய தெளஹீத் ஜமாத்தின் தற்போதைய தலைவர் மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புடைய ஏனைய உறுப்பினர்கள் அனைவரையும் கைதுசெய்யவேண்டும். அதுவரை பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருக்கும்.

ஐ.எஸ். ஐ,எஸ். அமைப்பு இஸ்லாமிய ராஜ்ஜியம் அமைப்பதாக தெரிவிக்கின்றபோதும் அந்த அமைப்பு இஸ்லாமிய அமைப்பல்ல என இஸ்லாமிய புத்திய ஜீவிகள் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய அடையாளத்தை பயன்படுத்திக்கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதாகவே தெரிவிக்கின்றனர்.அவ்வாறு அது இஸ்லாமிய அமைப்பாக இருந்தால், இன்று இஸ்ரேலால் உலகில் மிகவும் பாதிக்கப்பட்டுவரும் நாடாக பலஸ்தீன் இருந்து வருகின்றது. இஸ்ரேலுக்கு எதிராக அந்த அமைப்பு செயற்பட்டிருக்கவேண்டும். இதுவரை ஒரு தாக்குதலைக்கூட  ஐ.எஸ்.அமைப்பு நடத்தியதில்லை. 

ஐ.எஸ். அமைப்பு அமெரிக்காவின் உளவுத்துறை பிரிவால் உருவாக்கப்பட்டதொன்றாகும். கடந்த காலங்களில் தலிபான், அல் கைதா போன்ற அமைப்புகளை உருவாக்கியதுபோன்று   தற்போது ஐ,எஸ். என்ற பெயரில் உருவாக்கி நாடுகளுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி, அதனை காரணமாக தெரிவித்து அமெரிக்க ராணுவம் அந்த நாடுகளுக்குள் பிரவேசிப்பதே  இவர்களின் திட்டமாகும். எமது நாட்டிலும்   அந்த திட்டத்திலேயே   ஐ.எஸ். தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. தாக்குதல் இடம்பெற்று மறுநாளே அமெரிக்க எப்.பி. ஐ.  நாட்டுக்குள் வந்தது. அதனால் ஐ.எஸ். அமைப்பு தொடர்பாக நாங்கள் மிகவும் சிந்தித்து செயற்படவேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33