(எம்.ஆர்.எம்.வஸீம்)
பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டாலும் அதன் அச்சுறுத்தல் இன்னும் இருந்து வருகின்றது. தேசிய தெளஹீத் ஜமாத்தை வழிநடத்த வேறு தலைவர்கள் இருப்பார்கள். அவர்களையும் கண்டுபிடிக்கவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் உயிரிழந்துள்ளமை வைத்திய பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. பயங்கரவாத அமைப்பொன்றின் தலைவர் உயிரிழப்பதென்றால், அவர் வேறு ஒருவரை அந்த அமைப்பின் தலைவராக நியமிப்பதுவே வழமையாகும். அதனால் தேசிய தெளஹீத் ஜமாத்தின் தற்போதைய தலைவர் மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புடைய ஏனைய உறுப்பினர்கள் அனைவரையும் கைதுசெய்யவேண்டும். அதுவரை பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருக்கும்.
ஐ.எஸ். ஐ,எஸ். அமைப்பு இஸ்லாமிய ராஜ்ஜியம் அமைப்பதாக தெரிவிக்கின்றபோதும் அந்த அமைப்பு இஸ்லாமிய அமைப்பல்ல என இஸ்லாமிய புத்திய ஜீவிகள் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய அடையாளத்தை பயன்படுத்திக்கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதாகவே தெரிவிக்கின்றனர்.அவ்வாறு அது இஸ்லாமிய அமைப்பாக இருந்தால், இன்று இஸ்ரேலால் உலகில் மிகவும் பாதிக்கப்பட்டுவரும் நாடாக பலஸ்தீன் இருந்து வருகின்றது. இஸ்ரேலுக்கு எதிராக அந்த அமைப்பு செயற்பட்டிருக்கவேண்டும். இதுவரை ஒரு தாக்குதலைக்கூட ஐ.எஸ்.அமைப்பு நடத்தியதில்லை.
ஐ.எஸ். அமைப்பு அமெரிக்காவின் உளவுத்துறை பிரிவால் உருவாக்கப்பட்டதொன்றாகும். கடந்த காலங்களில் தலிபான், அல் கைதா போன்ற அமைப்புகளை உருவாக்கியதுபோன்று தற்போது ஐ,எஸ். என்ற பெயரில் உருவாக்கி நாடுகளுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி, அதனை காரணமாக தெரிவித்து அமெரிக்க ராணுவம் அந்த நாடுகளுக்குள் பிரவேசிப்பதே இவர்களின் திட்டமாகும். எமது நாட்டிலும் அந்த திட்டத்திலேயே ஐ.எஸ். தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. தாக்குதல் இடம்பெற்று மறுநாளே அமெரிக்க எப்.பி. ஐ. நாட்டுக்குள் வந்தது. அதனால் ஐ.எஸ். அமைப்பு தொடர்பாக நாங்கள் மிகவும் சிந்தித்து செயற்படவேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM