முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் உள்ளடக்கும் வகையில் அந்த சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கி பொருத்தமான அரசியல் திட்ட வரைபொன்றை உருவாக்குவதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எண்ணமாகுமென்று அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாஷ் பதியுதீன் நேற்று முன்தினம் மாலை தெரிவித்தார்.
மக்கள் காங்கிரஸ் தயாரித்துள்ள அரசியல் திட்ட வரைபை மேலும் மெருகூட்டி அதனை முழுமைப்படுத்துவதற்காக முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் அரசியல் மறுசீரமைப்பு ஆலோசனைக்குழு நடத்திய கலந்துரையாடலில் அமைச்சர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், எவரையும் வீழ்த்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக நாம் இந்தத் திட்ட வரைபை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. எல்லோரையும் வீழ்த்திவிட்டு நாம் மட்டும் தான் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுபவர்களும் நாமல்லர். கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சமூகத்தின் சகோதரக்கட்சிகளுடன் விட்டுக்கொடுப்புக்களை ஏற்படுத்தியுள்ளோம்.
முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை கருத்தில் கொண்டு எமக்குள்ளே பல்வேறு வேறுபாடுகள் இருந்த போதும் அவற்றுக்கும் அப்பால் பொதுவான இணக்கப்பாட்டுடன் இந்த சமூகத்திற்கு ஏற்றவகையில் ஓர் அரசியல் திட்டம் அமைய வேண்டுமென்பதில் எமக்கு இரண்டுபட்ட கருத்துக் கிடையாது. அந்த வகையிலேயே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு அனுபவங்களைப் பெற்று சமூகத்திற்கு பணியாற்றி இன்று “முன்னாள்” என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு இருக்கும் சமூகப் பணியாளர்களை அழைத்து கருத்துக்களைக் கேட்கின்றோம்.
தொடர்ந்து சுமார் 120 பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களையும் கல்விமான்களையும் வரவழைத்து ஆலோசனை பெறவுள்ளோம். அதன் பிறகு சமூகத்தின் தூண்களாக இருக்கும் ஜம்மிய்யத்துல் உலமா, சூரா கவுன்சில், முஸ்லிம் கவுன்சில் உட்பட பல்வேறு அமைப்புக்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து அவற்றை உள்வாங்க உள்ளோம். இதுமட்டுமன்றி முஸ்லிம் சமூகத்தின் அடிமட்ட மக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்வோம். அத்துடன் சிறுபான்மை கட்சிகளுக்கும் சிறுகட்சிகளுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு பொதுவான உடன்பாட்டை எட்டுவதற்காக அந்தக் கட்சிகளுடனும் பேச்சு நடத்த எமது கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான அழைப்பிதழ்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.
" எவரையும் வீழ்த்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்கில்லை "
Published By: Raam
28 Apr, 2016 | 07:47 AM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM