இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் சமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வு ஒன்றினை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தலைமை ஏற்று முன்னெடுக்கவேண்டும் "இலங்கை தமிழ் மக்கள் உங்களிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று இந்திய மக்களை தேர்தலில் வெற்றிபெற்ற அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் சமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வு ஒன்றினை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தலைமை ஏற்று முன்னெடுக்கவேண்டும்
"இலங்கை தமிழ் மக்கள் உங்களிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். உங்களிடம் பல விடயங்களை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்" தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் தொடர்ந்து அரசாங்க அடக்குமுறை, இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள குடியேற்றம் ஆகியவற்றின் பாதிப்புக்களினால் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்
இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, இறைமை மற்றும் சுய மரியாதையை ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்றுவலியுறுத்தியிருந்தீர்கள். இந்தியா தனது அயலவர்கள் சந்தோசமாகவும் திருப்தியாகவும் இருப்பதை உறுதிசெய்யும் நேரம் வந்திருக்கின்றது.
மோடி ஆட்சிக்கு முதன் முதலில் வந்தபோது நவீன இந்தியாவின் சிற்பியாக அவர் திகழ்வார் என்று சுவாமி வியானந்தஜி குறிப்பிட்டமை சரியாகி விட்டது இந்த தேர்தல் வெற்றி ஒரு பெரு வெற்றியாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM