முஸ்லிம்கள் 24 மணித்தியாலத்தில் எந்த நேரத்திலும் பள்ளிவாசல்களுக்கு சென்று தமது கடமைகளில் ஈடுபட முடியும் என அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மஹிந்த முதலிகே தெரிவித்தார்.
கல்முனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சிவில் சமூக அமைப்பினர்கள் மற்றும் உலமா சபையினருக்கும் இராணுவ கட்டளைத் தளபதிக்கும் இடையிலான கல்முனை மாநகர பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் மக்கள் புனித நோன்பு காலத்தில் தமது மார்க்க கடமைகளை பள்ளிவாசல்களில் நிறைவேற்றுவதில் எழுந்துள்ள அசௌகரியங்கள் பற்றி தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து உரையாற்றும் போதே கட்டளைத்தளபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,
குர்ஆனிலோ அல்லது எந்த மதத்திலோ யாரையும் கொல்லும்படி கூறவில்லை. ஒருவர் இன்னொருவரை கொன்றுவிட்டு எவ்வாறு சுவர்க்கம் செல்ல முடியும்?. 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தோம். இதனை குழப்புவோர் வேறு நபர்கள். நான் இஸ்லாம் மதத்தை விமர்சிக்கவில்லை எனக்கு நண்பர் ஒருவர் சொன்னார் மற்ற மதத்தவர்களை கொன்றால் சுவர்க்கத்தில் 72 மனைவிமார் கிடைப்பர் என்று. இது ஒரு சோடிக்கப்பட்ட கதையாகத்தான் இருக்க வேண்டும். ஒரு மனைவியை வைத்துக் கொண்டு வாழ்வதற்கே முடியாமல் உள்ளது என்றார்..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM