இந்திய மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2-வது முறையாக எதிர்வரும் 30 ஆம் திகதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அரசு முறை வெளிநாட்டு பயணத்திட்டம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி மோடி பதவி ஏற்ற பின் ஜூன் 13 ஆம் திகதி கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளார். மேலும் ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி-20 மாநாட்டில் 2 நாட்கள் பங்கேற்கவுள்ளார்.
தொடர்ந்து ஒகஸ்ட் மாதம் பிரான்ஸ் நாட்டிற்கும், செப்டம்பரில் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதனைத்தொடர்ந்து நவம்பர் மாதத்தில் தாய்லாந்து, பிரேசில் நாடுகளுக்கும் மோடி பயணம் மேற்கொள்ளகிறார். இதன் மூலம் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின் 6 மாதங்கள் தொடர்ந்து வெளிநாடு பயணம் மேற்கொள்ள போகிறார் என்று தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி, அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதாக, தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.
சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் விமர்சனத்திற்குள்ளாகின. இந்த சூழலில், அடுத்த 6 மாதத்திற்கான பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண திட்டம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM