இஸ்லாமிய விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மறுசீரமைப்புக்கள் தேவை- முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள்

Published By: Daya

25 May, 2019 | 04:35 PM
image

(நா.தனுஜா)

இஸ்லாமிய விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எம்முடைய நாட்டில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். எனினும் இந்தத் தனியார் சட்டத்தில் முஸ்லிம் சமூகம் கோருகின்ற மாற்றங்களைச் செய்வதே தேவையாகும். மாறாக முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை முழுமையாக இல்லாமல் செய்வது என்பது அந்தச் சமூகத்திற்கு இழைக்கின்ற அநீதியாகவே அமையும் என்று முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 

முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டத்தில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும், பொதுவானதொரு திருமண வயதெல்லையை நிர்ணயிப்பதற்கும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இதுகுறித்து முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர் ஒருவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொதுச்சட்டம் என்ற ஒன்று காணப்படுகின்ற அதேவேளை, முஸ்லிம்களுக்கென தனியார் சட்டமும் உள்ளது. அதுவே ஷரியா சட்டம் என்று அழைக்கப்படுகின்றது. பொதுச்சட்டத்தின் பிரகாரம் திருமண வயதெல்லையாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தின் கீழான முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின்படி வயதுக்கு வந்தவர்கள் திருமணம் செய்வதற்குத் தகுதியுடையவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். 

அதன்படி 18 வயதை அடையும் முன்னரே திருமணம் செய்துவைக்கும் சம்பவங்கள் எம்முடைய நாட்டில் நடைபெறவே செய்கின்றன. அதேபோன்று முஸ்லிம்களின் திருமணங்கள் பொதுச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை. மாறாக தனியார் சட்டத்தின் கீழேயே பதியப்படுகின்றன. அதேபோன்று விவாகரத்துப் பெறுவதாயின் முஸ்லிம்களுக்கென காதி நீதிமன்றங்கள் உண்டு.

இந்நிலையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எம்முடைய நாட்டில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். எனினும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பொன்றின் சிபாரிசை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. 

எனினும் இந்தத் தனியார் சட்டத்தில் முஸ்லிம் சமூகம் கோருகின்ற மாற்றங்களைச் செய்வதே தேவையாகும். மாறாக முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை முழுமையாக இல்லாமல் செய்வது என்பது அந்தச் சமூகத்திற்கு இழைக்கின்ற அநீதியாகவே அமையும். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாக நோக்குகின்ற நிலையொன்று உருவாகியிருக்கும் சூழ்நிலையில், அரசாங்கம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் எத்தகைய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருக்கின்றது என்பது குறித்து சிந்திப்பது அவசியாகும் என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22