நான் ஸ்ரீலங்கன்: நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமை எனக்கு உள்ளது : பலவந்தமாக முகாமுக்குள் செல்லவில்லை: சம்பந்தன் ஆவேசம் 

Published By: MD.Lucias

27 Apr, 2016 | 04:10 PM
image

நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமை எனக்கும் உள்ளது. ஏன் என்றால் நான் இந்நாட்டு குடிமகன். எனினும் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று என்னால் கூற முடியாது. அவ்வாறு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று நினைத்தால் அதற்கான உரிமை எனக்கும் உள்ளது. நான் இலங்கையன் எனும் போது ஏன் முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நாட்டை பிரிக்கவோ துண்டாக்கவோ நாம் கோரவில்லை. ஒரே நாட்டுக்குள்ளே அதிகாரத்தை கோருகின்றோம். இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 

தனி மாகாணம் வேண்டும் என கேட்பது ஒரே நாட்டுக்குள் தான். இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டிய தேவையில்லை. 

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மொழி பேசுபவர்களே அதிகமாக உள்ளனர். எனவே அவர்களுக்கான அதிகாரத்தை அவர்களுக்கே வழங்க வேண்டும். இதேபோன்றே தெற்கில் சிங்களவர்கள் அதிகம் என்பதால் அவர்களுக்கான அதிகாரத்தை அவர்களிடம் வழங்க வேண்டும். இது தொடர்பில் அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

நாட்டை பிரிக்க வேண்டும் என யாரும் கோரவில்லை. எல்லோரும் இலங்கையர்களே. நாட்டை யாரும் பிரிக்க முடியாது. 

கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்காக சென்றிருந்தேன். கலந்துரையாடல் முடிவின் போது சிலர் என்னிடம் வந்து, எமது இடத்தின் ஒரு பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ளது.   இதனை நேரடியாக சென்று பாருங்கள் என்றனர்.

இதனையடுத்து நான் இராணுவ முகாமுக்குள் சென்றேன். என்னை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. நானும் பலவந்தமாக செல்லவில்லை. அங்கு ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் நான் அங்கு சென்று பார்த்தேன். மக்கள் கூறியது போல அவர்களின் இடம் சூறையாடப்பட்டிருந்தது. நான் ஒன்றும் கூறவில்லை. இவ்விடயம் தொடர்பாக  அரசாங்கத்திடம் கதைக்கின்றேன் எனக்கூறி அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அங்கு இரண்டு மூன்று இராணுவ வீரர்கள் இருந்தனர்.

நான் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது இவ்வாறு சென்று அவதானிப்பது வழமை.  இதேபோன்று கடந்த காலப்பகுதியில் வலிகாமத்துக்கும் சென்று பார்த்து வந்தேன். அங்கு இராணுவத்தினரும் இருக்கவில்லை. மக்களும் இருக்கவில்லை. இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவித்து பொதுமக்கள் பாவனைக்கு இடத்தை பெற்றுகொடுத்தேன். 

நான் நேரில் சென்று அவதானிப்பது எனது உரிமை. நான் பலவந்தமாக செல்லவில்லை. நான் வாகனத்தில் ஏறி வரும்போது இராணுவ அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலம், சேர் நீங்கள் வருவீர்கள் என்று முன்னதாகவே அறிவித்து இருந்தால் நான் அதற்கென ஒருவரை ஏற்பாடு செய்து எல்லாவற்றையும் காணப்பித்து இருப்பேன் என்றார். ஆனால் நான் அங்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் போகவில்லை. 

நாட்டைப் பிளவுப்படுத்தும் நபர்களே இவ்வாறான கதைகளை கூறுகின்றனர். நான் பலவந்தமாக செல்லும் மனிதன் அல்ல. நாட்டை இல்லாமல் செய்ய எத்தணிக்கும் உதயன்கம்பன்பிலவே இதனை முதலில் கூறியிருந்தார். அந்த மனிதரின் முகத்தை கூட பார்க்க எனக்கு விருப்பமில்லை. இதுதொடர்பில் எவருக்காவது விளக்கம் வேண்டும் என்றால் நேரடியாக என்னிடம் வந்து கதைக்க சொல்லுங்கள். அதைவிடத்து பொய் கூற வேண்டாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51