சட்ட விரோதமாக  அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 41 பேர் கைது

Published By: Digital Desk 4

25 May, 2019 | 03:25 PM
image

(எம்.மனோசித்ரா)

சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 41 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  தெற்கு கடற்பரப்பிலிருந்து 715 கடல் மைல் தொலைவில் வைத்து 23 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 35 ஆண்களும், 6 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 6 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஏழு பேர் உள்ளடங்குகின்றனர். ஏனையவர்கள் 18 தொடக்கம் 50 வயதுடையவர்களாவர். 

இவர்கள் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரதும் வைத்திய பரிசோதனைகள் நிறைவடைந்ததன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 

நாட்டில் உருவாகியுள்ள பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்புத் துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கினங்க சட்ட விரோதமாக நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதோ அல்லது உள்நாட்டுக்கு வருகை தருவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த விடயம் தொடர்பில் கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது. 

வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறும் ஆட்கடத்தல்கார்களின் போலியான வாக்குறுதிகளை நம்பி பொது மக்கள் பணத்தை இழந்துவிடக் கூடாதென்றும், இது போன்ற விடயங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கடற்படை அறிவுறுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27