வடக்கில் மட்டும் மோசமான சோதனை நடவடிக்கை எதற்காக? மாவை

Published By: Daya

25 May, 2019 | 11:45 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)


அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் வடக்கில் நடக்கும் மோச­மான சோதனை செயற்­பா­டு­களை  ஒரு­போதும் ஏற்றுக்­கொள்ள முடி­யாது. தென்­னி­லங்­கையை விடவும் வடக்கில்  இவ்­வாறு மோச­மான சோத­னைகள் இடம்  பெ­று­கின்­ற­மைக்­கான காரணம் என்ன   என சபையில் தமிழ் தேசிய கூட் ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா, கேள்வி எழுப்­பினார். 


அவ­ச­ர­கால சட்­டத்தை நீடிக்கும் ஜனா­தி­ப­தியின் யோச­னைக்கு வன்­மை­யான கண்­ட­னத்­தையும் எதிர்ப்­பையும் வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவும்  கூறினார். 


பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற அவ­ச­ர­கால சட்­டத்தை நீட்­டிக்கும் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் இதனைக் குறிப்­பிட்டர். 


  அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 
அவ­ச­ர­கால சட்­டத்தை மீண்டும் ஒரு மாதம் நீடிக்கும் பிரே­ரணை  கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.  ஐ.எஸ்.பயங்­க­ர­வாத அமைப்­பினை இலங்­கையில் அழித்­தொ­ழிக்க முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டத்­துக்­காக இது கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தாக   ஜனா­தி­பதி கூறி­யுள்ளார். அதற்­கான அவ­ச­ர­கால பிர­க­ட­ன­மொன்றை  வெளி­யிட்­டுள்ளார். 


இது  கடந்த 24 ஆம் திகதி தான் வர்த்­த­மா­னியில் வெளி­வந்­தது. இதில் முன்பு வேண்டாம் என கைவி­டப்­பட்ட விதிகள் இப்­போது மீண்டும் அவ­ச­ரகால் சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன. அவ­ச­ர­கால சட்டம் கொண்­டு­வ­ரு­வது என்றால் முதலில் அவர் பார­ளு­மன்ற கட்­சி­களை அழைத்து பேசி­யி­ருக்க வேண்டும். இன்­று­வரை அதை அவர் செய்­ய­வில்லை.

எமது தமிழ் பிர­தே­சங்­களை பொறுத்­த­வரை இந்த அவ­ச­ர­கால சட்­டத்தின் மூலம் நீண்ட கால­மாக  மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டது எமது மக்­க­ளாவர்.  வடக்கு பகு­தியில் உள்ள பிரச்­சினை  ஏனைய பகு­தி­களின் பிரச்­சி­னையை போன்று அல்ல.  தென்­னி­லங்­கையில் மேற்­கொள்­ளாத சோதனை நட­வ­டிக்­கைகள் வடக்கில் இடம்­பெ­று­கின்­றன. வடக்கில் தான் மிக அதி­க­மா­கவும் மிகவும் மோச­மா­கவும் சோத­னைகள் இடம்­பெ­று­கின்­றன. 


எமது மாண­வர்கள்  பாட­சா­லை­களில், பஸ்­களில் பரி­சோ­திக்­கப்­ப­டு­வ­துடன்  இன்­னும்­பல சோத­னைகள் இடம்­பெ­று­கின்­றன. ஏன் இரா­ணுவ அள­வுக்கு அதி­க­மாக குவிக்­கப்­பட்­டனர், ஏன் சோதனை நடக்­கின்­றன என்ற கார­ணி­களை தெரி­யாத  சிறு பிள்­ளைகள் இன்று பாரிய நெருக்­க­டி­களை சந்­திக்க நேர்ந்­துள்­ளது. உண்­மையில் இந்த சோத­னை­க­ளுக்கு ஒரு விதி­மு­றையும் கட்­டுப்­பாடும்  இருக்க வேண்டும். இது குறித்து ஜனா­தி­பதி ஆரம்­பத்தில் ஆராய்ந்­தி­ருந்தால் இவ்­வாறு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டாது இருந்­தி­ருக்கும். இன்­றி­லி­ருந்­தா­வது பாட­சா­லைகள் பரி­சோ­திக்­கப்­ப­டு­வது குறித்த முன் அறி­வித்­தலை விடுக்­கப்­பட வேண்டும். எமது மாண­வர்­களை நெருக்­க­டிக்கு தள்ள முடி­யாது. 

ஞான­சார தேரரின் விடு­தலை

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த ஞான­சார தேரரை விடு­விக்க  முடியும் என்றால் நீண்ட கால­மாக பயங்­க­ர­வாத சட்­டத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள எமது தமிழ் இளை­ஞர்கள் விடு­விக்க ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. இது குறித்து நாம் நீண்ட கால­மாக கோரிக்கை விடுத்து வரு­கின்றோம். ஏன் இதற்கு செவி­ம­டுக்க முடி­ய­வில்லை. அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட வேண்டும் என சர்­வ­தேச ரீதி­யாக கோரப்­பட்டும் இன்று­வரை அதனை கவ­னத்தில் கொள்­ளாது தாம் விரும்­பிய வகையில் கையாள்­வது மோச­மா­னது. ஒரு பொருத்­த­மான சட்டம் கொண்­டு­வர வேண்டும்.

இன்­றைய சூழ­லுக்கு ஏற்ப மாற்­றப்­பட வேண்டும். அவ­ச­ர­கால சட்­டத்தை நாம் வன்­மை­யாக எதிர்க்­கின்றோம். இன்று எமது தீர்வு விட­யங்­களை தடுக்க பல்­வேறு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அர­சியல் தீர்வு குறித்து எவரும் பேச தயா­ராக இல்லை. 


இந்த அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் பல விட­யங்­க­ளுக்கு நாம் ஆத­ரவு தெரி­வித்­துள்ளோம். இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை நாம் ஆத­ரிக்­க­வில்லை. இதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையாக ஆதரவு தெரிவிக்கின்றோம். இந்த அவசரகால சட்டம் இருக்கும் வரையில் எமது பிரதேசங்களும் கட்டுப்பாட்டில் இருக்கப்போகின்றன. ஆகவே இதனை நாம் ஆதரிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அவசரகால சட்டத்தை நீடிக்க ஆதரவு இல்லை. இதனை நீக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடகும். . இதனை எதிர்த்தே நாம் செயற்படுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10