கைது செய்யப்படவேண்டிய விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய புள்ளிகள் வெளியில் உல்லாசமாக வாழக்கை நடத்த புனர்வாழ்விற்கு உள்ளாக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படுவது எந்தவிதத்தில் நியாயமாகும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
முன்னாள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து புனர்வாழ்வு பெற்று தனது வீட்டில் வாழ்ந்து வந்த ராம் அவர்களின் கைது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து இறுதியில் தனது குடும்பத்தினையும் இழந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளியான தளபதி ராம் அவர்களது கைது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிகழ்வாகும். அவரது கைதானது ஒரு மனித உரிமை மீறலாகும்.
காரணம் இயக்கத்தில் இருந்து அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தனது குடும்பத்துடன் தனதுழைப்பில் திருக்கோயிலில் வாழ்ந்து வந்த சந்தர்ப்பத்தில் இவரை கைது செய்ததென்பது ஒட்டு மொத்த புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகளை ஒரு கணம் திகைப்பில் ஆழ்த்தியிருக்கின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து தனது மனைவி, பிள்ளைகளை இழந்து இறுதிக் காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தான் என்றும் தன்னுடைய வேலை என்றும் விவசாயத்தினை செய்து வாழ்ந்து வருகின்ற சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக கைது செய்வதென்பது ஒரு மனிதாபிமானமற்ற செயற்பாடாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.
நல்லாட்சி என்று கூறும் இந்த ஆட்சிக் காலத்திலும் மகிந்த ஆட்சியில் இருந்ததைப் போன்ற செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரும் ஒரு அச்சமானதும், மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சூழ்நிலையில் வாழ வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகும்.
இதன் காரணமாக தங்களது வேலைகளை தாங்கள் சுயாதீனமாக செய்ய முடியாமல் போவதுடன் தங்களது குடும்ப வாழ்க்கையை சரியான ஒரு நீரோட்டத்தில் கொண்டு செல்ல முடியாமல் போகும்.
தற்போதைய அரசாங்கமானது இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு புதிய வாழ்க்கைக்கு தங்களை உட்படுத்தி வாழ்ந்து கொண்டு வரும் முன்னாள் போராளிகளை கைது செய்வதனை தவிர்த்து விட்டு கைது செய்து புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படவேண்டிய அதாவது பெரிய பெரிய குற்றங்களை செய்து விட்டு நல்லவர்கள் போன்று தங்கள் குடும்பங்களுடன் வெளியில் இருந்து கொண்டு உல்லாசமாக திரியும் முக்கிய புள்ளிகளை உடனடியாக கைது செய்து அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்தும் வேலைத்திட்டங்களை இந்த அரசு செய்வேண்டும்.
இன்று எமது உறவுகள் இந்த நாட்டில் ஏற்பட்ட நிகழ்வுகளினால் இங்கு வாழ முடியாமல் வெளிநாடுகளில் தங்களது குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்ற உறவுகள் மீண்டும் இங்கு வருவதற்கு இவ்வாறான கைதுகள் மிகுந்த அச்சத்தினை உண்டு பண்ணியிருக்கின்றது.
ஆகவே இவ்வாறான கைதுகள் மூலம் ஏனைய புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வீட்டில் உள்ளவர்களும், தமிழ் மக்களும் பய, பீதியுடன் தங்களது வாழ் நாளை கழிக்க வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM