(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
அமைச்சர் ரிஷாத் பதியுதீனை சுத்தப்படுத்தவே நம்பிக்கையில்லா பிரேரணையை ஒரு மாதகாலத்துக்கு பிற்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்துக்கு தேவையான பிரேரணைகளை 24மணி நேரத்துக்குள் நிறைவேற்றிக்கொண்ட வரலாறு இந்த பாராளுமன்றத்துக்கு இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஒரு மாதம் வரை பிற்படுத்தி இருப்பது தெரிவுக்குழு அமைத்து ரிஷாத் பதியுதீனை சுத்தப்படுத்துவதற்காகும். இந்த பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைகளை எவ்வாறு நிறைவேற்றியது என்பது வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது. காலையில் பிரேரணையை கொண்டுவந்து பகல் வேளையில் விவாதித்து மாலையில் அதனை அனுமதித்துக்கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தையும் அமைச்சுப்பதவிகளையும் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்தனர்.
அதனால் நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணையை பிரதமர் பிற்படுத்தி இருப்பது தெரிவுக்குழு அமைத்து ரிஷாத் பதியுதீனின் குற்றங்களை சுத்தப்படுத்தியதன் பின்னர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்காகும். ஏனெனில் ரிஷாத் பதியுதீன் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அச்சுறுத்தி இருக்கின்றார். அதனால் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கும் அமைச்சுக்களை பாதுகாப்பதற்குமே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM