இந்திய பொதுத் தேர்தலில் பா.ஜ.க கட்சி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், நரேந்திர மோடிக்கு இலங்கை அரச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இடம்பெற்றது.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதில் பா.ஜ.க. 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமா் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
பிரதமா் ரணில் விக்ரமசிங்க புதிதாக அமையவுள்ள பா.ஜ.க. அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தொிவிப்பதாக டுவிட்டாில் பதிவிட்டுள்ளாா்.
இதே போன்று எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச இந்நிய மக்களவை தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று இரண்டாவது முறையாகவும் பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்விற்குரியது. தொடரும் ஆட்சியில் வெற்றிகளே கிடைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்நிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை தொடர்ந்து தனது அயல் நாடான இந்நியாவுடன் இணக்கமாகவே செயற்படும். ஒன்றாக இணைந்து செயல்படுகின்ற வலுவான இருதரப்பு உறவுகளில் இரு நாடுகளும் ன்றும் இணைந்திருக்கும் உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM