யாழ். மாவட்டத்தில் அதியுயர் பெறுபேறுகளைக் கொண்ட முன்னுரிமைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில் குருநகர் மீன்பிடித் துறைமுக நங்கூரமிடும் தளம் அபிவிருத்தி, யாழ்.அருணோதயா கல்லூரி அபிவிருத்தி வேலைத்திட்டம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான அவசர உபகரண தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலைத்திட்டம் மற்றும் யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற கட்டிடத் தொகுதிகளும் இளைஞர் ஆளுமை விருத்திக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் உள்ளடங்குகின்றன என தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
யாழ். மாவட்டத்தின் யாழ். பிரதேச செயலகப் பிரிவின் கீழ் அமைந்துள்ள குருநகர் மீன்பிடித்துறை நங்கூரத் தளமானது 3,117 கடற்றொழிலாளர் குடும்பங்களை உள்ளடக்கிய 10,760 அங்கத்தவர்களைக் கொண்ட கடற்றொழில் மையமாகும். இதில் 90 வீதமான மக்களின் வாழ்வாதாரம் கடற்றொழிலை மையமாகக் கொண்டுள்ளது.
வருடாந்த மீன்பிடி உற்பத்தி 7,390 மெற்றிக் தொன்னாகவும் மேலும் 562 மெற்றிக் தொன் கருவாடு உற்பத்திகளைக் கொண்டதுமான ஒரு கடற்றொழில் பொருளாதார வலயமாகவும் காணப்படுகின்றது.
2000க்கும் மேற்பட்ட ஒரு நாள் படகுகளும் படகுகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதுடன் 500க்கும் மேற்பட்ட ரோலர் படகுகள் ஆழ்கடலை நோக்கி மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் காணப்படுவதுடன் இத் துறையின் அபிவிருத்திக்கு கடற்கரை சார்ந்த மீன்பிடித் துறைக்கான வசதிகள் போதியளவு காணப்படாமையும் குறிப்பாக ஏலமிடும் அறை, வலை பின்னும் நிலையம், குளிரூட்டல் வசதிகள், எரிபொருள் நிலையம், பட குகள் திருத்தும் தொழிற்பட்டறைகள் போன்றவை காணப்படாதமை இத்துறையின் வளர்ச்சிக்கு பாரிய சவாலாக அமைந்திருப்பதாக குருநகர் பிரதேச மீன்பிடித் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இக்கலந்துரையாடலின் அடிப்படை
யில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அமைச்சராகக் கொண்ட தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினுடைய முன்னெடுப்பில் ஏலமிடும் கட்டிடத்தொகுதி, எரிபொருள் நிலையம், வலை பின்னும் நிலையம் உட்பட சில உடனடித் தேவைகளை நிறைவு செய்வதற்கு உடனடியாக 33.83மில்லியன் ரூபா கிரயத்தில் இக்கருத்திட்டம் அனுமதிக்கப்பட்டு அமுலாக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்திட்டம் மாவட்ட செயலா ளர் ஊடாக யாழ். பிரதேச செயலகத்தின் மூலம் அமுல்படுத்தப்
படவுள்ளது. இக்கருத்திட்டத்தின் மூலம் குருநகர் கடற்றொழிலாளர் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தப்படுவதுடன் கடற்றொழில் துறையை விருத்தி செய்வதற்கு இது உதவி செய்யும். இக்கருத்திட்டம் முடிவுறுத்தப்படும் பொழுது குருநகர் பிரதேசத்திலுள்ள கடற்றொழிலாளர்களுக்கு ஏலம் விடும் கட்டிடத் தொகுதியும் எரிபொருள் நிலையமும் மீன் வலை பின்னும் நிலையமும் வெளியீடுகளாகப் பெறப்படும். இக்கருத்திட்டத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இதனை மேலும் வலுப்படுத்துவதற்கான கருத்திட்ட வேலைத் திட்டங்கள் மீள் குடியேற்ற புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும். இக்கருத்திட்டம் குருநகர் வாழ் மீன்பிடி கடற்றொழில் குடும்பங்களுக்கு ஓர் ஆரம்பக் கட்ட கருத்திட்ட முன்னெடுப்பாக அமையும்.
மேலும் உயர் பெறுபேறுகளைக் கொண்ட கருத்திட்டத்தில் யாழ். அருணோ தயா கல்லூரி தொடர்பாக பல் தேவை களைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றுகூடல் மண்டபம் மற்றும் வகுப்பறைகளையும் உள்ளடக்கிய இரண்டு மாடிக் கட்டிடத்துக்கு 55 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் வருடாந்தம் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவத்துறை, பொறியியல்துறை, வர்த்தகத்துறை மற்றும் கலைத்துறை போன்ற பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொள்கின்றார் கள். அத்துடன் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 80 வீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் சித்தியடையும் வீதத்தைப் பெற்று மாகாண, தேசிய மட்டத்தில் சாதனைகளைப் படைக்கின்றனர்.
பாடசாலை நிகழ்வுகளை மாலை நேரங்களில் திறந்தவெளி அரங்கில் நடத்துவதனால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இக் கட்டிடமானது அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு வசதிப்படுத்தலாக அமையும் என பாடசாலை ஆசிரியர்களும் நலன்விரும்பிகளும் விரும்புகின்றனர்.
உயர் விளை திறன் கொண்ட கருத்திட்டங்களில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மேம்படுத்தும் வேலைத் திட்டத்திற்கு 56 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வைத்திய உபகரணங்களுக்கும், சத்திரசிகிச்சைப் பிரிவு மற்றும் நோயியல் ஆய்வுகூட புனரமைப்பு, குழந்தை பிரசவிப்புப் பகுதிக்கான வசதிகளும் விரிவாக்கல்களும் சாப்பாட்டு அறை அமைத்தல் மற்றும் நோயாளர் பிரிவு, மகப்பேற்றுப் பிரிவு, பெண் நோயியல் பிரிவு உட்பட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட இளைஞர் ஆளுமை விருத்திக்கான கட்டிடத் தொகுதிகளும் வசதிகளுக்குமான வேலைத் திட்டத்துக்க ரூபா 50 மில்லியன் நிதி தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் கீழ் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் இதில் தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கான மாவட்ட அலுவலகம், இளைஞர் பயிற்சி நிலையம், இளைஞர் விளையாட்டுத் திடல், இளைஞர்களுக்கான உள்ளக பயிற்சி வசதிகள், இளைஞர் கலாசார மண்டபம் உள்ளடங்கலாக 11,000 இளைஞர்களுக்கு வசதிப்படுத்தும் வேலைத்திட்டமாக இது அமைவது குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்ட இந்த இளைஞர் ஆளுமை அபிவிருத்திக்கான கட்டிடத் தொகுதியானது சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் அமையவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM