(செய்திப்பிரிவு)
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருட்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கைகள் வெள்ளம்பிடிய, பேலியகொட மற்றும் வீரவுல பகுதிகளில் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
வெள்ளம்பிடிய பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 04 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்த மீதொட்டு முல்லவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினரால் மீனுவாங்கொட வீதியில் மஹாயாய பகுதியில் 02 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோயினுடன் 31 வயதுடைய ஒருவரும் 02 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயினுடன் 23 வயதுடைய ஒருவரும் கைதுசெய்யப்ட்டுள்ளனர்.
வீரவுல – தெமடலந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சோதனை நடவடிக்கைகளின் போது வதுருகம பகுதியை சேர்ந்த 28 மற்றும் 32 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 05 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM