'இனிமேலும் வன்முறை வேண்டாம்' என்ற தலைப்பில் நீர்கொழும்பில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயம் உட்பட பல தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து நீர்கொழும்பு நகர மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் நீர்கொழும்பில் 100 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 200 பேர் வரை காயமடைந்தனர். நகரம் சோகத்திலும் அச்சத்திலும் மூழ்கியது.
இரண்டு வாரங்கள் கழித்து கடந்த 05 ஆம் திகதி நீர்கொழும்பு போரதொட்ட பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை தோன்றியது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட இரவு வேளையில், பெரியமுல்லை பிரதேசத்தில் சில இடங்களில் வன்செயல்கள் இடம்பெற்றன. முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் தாக்கப்பட்டன. சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டன. நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டன. வாகனங்கள் பலவற்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள்கள் சில தீவைக்கப்பட்டன. மக்கள் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நகரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம், நீர்கொழும்பு பிரதேச சர்வ மத குழு ஆகியன தனித்தனியாக மூன்று மொழிகளிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளன. நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம் நகரில் பல இடங்களிலும் ஒட்டியுள்ள சுவரொட்டியில்,
'இனிமேலும் வன்முறை வேண்டாம், தேசிய அனர்த்தத்தின்போது நீர்கொழும்பு மக்களாகிய நாம் காட்டிய முன்மாதிரியை தொடர்ந்து முன்னெடுப்போம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பிரதேச சர்வமத குழு ஒட்டியுள்ள சுவரொட்டியில்,
'வன்முறை வேண்டாம், இலங்கையின் ஒரு இனமாக மீண்டும் கட்டியெழுப்புவோம்' என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நகரில் அமைதி நிலவுகிறது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM