(ஆர்.விதுஷா)
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம் பெறும். அது தொடர்பான அறிவிப்பு ஒக்டோபர் மாதத்தில் தெரியவரும். மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படும். அதற்கு முன்னதாக ஆட்சிக் கவிழ்ப்பு, ஆட்சி மாற்றம் பற்றி குழப்பமடையத் தேவையில்லை என்று பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அமரபுர பீட கொடுகொட தம்மாவாஸ மஹாநாயக்க தேரரை நேற்று திங்கட்கிழமை சந்தித்து ஆசி பெற்ற பின் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது இவ்வாறு கூறிய அமைச்சர், குடும்ப ஆட்சியை விடுத்து தகைமைக்கும், திறமைக்கும் முன்னுரிமை கொடுத்து தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தக் கூடிய நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மக்கள் பலம் எமக்குண்டு. ஆகவே தான் நாம் இதுவரையில் ஆட்சியில் உள்ளோம். கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் எமக்கு வாக்களித்த மக்களுக்கு எக்காலத்திலும் துரோகம் விளைவிக்க மாட்டோம். அத்துடன் பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழிக்க கட்சிபேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது. அது தொடர்பில் ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்படும். அதன்போது மக்களுக்கு வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அதற்கு முன்னதாக ஆட்சியைக் கவிழ்த்தல் மற்றும் மாற்றம் தொடர்பில் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.
அத்துடன், திறமைகளுக்கும் தகைமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நாட்டை உருவாக்க வேண்டும். அதற்கான தகுந்த காலம் உருவாகியுள்ளது.
குடும்ப ஆட்சிக்கு அப்பால் சென்று திறமையும் தகைமையும் உடைய தரப்பினருக்கு ஆட்சிப் பலம் அளிக்கப்
பட வேண்டும். நாம் வெளிநாட்டவர் அல்ல இலங்கை வாழ் மக்கள். நாம் இந்த நாட்டின் பிரஜைகள். ஆகவே, நாம் எமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத் துவோம். எதிர்காலத்திலும் அவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெ டுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM