தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் தொடரில் இலங்கை அணி ஒரு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் உட்பட மூன்று பதக்கங்களை சுவீகரித்துள்ளது.
அந்தவகையில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனையான ஷியாமா முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை வீரரான அசங்க லக்மால் மூன்றாமிடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
மகளிருக்கான நீளம் பாய்தலில் 6.12 மீற்றர்கள் தூரம் பாய்ந்த லக் ஷானி மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
தொடரின் கடைசி நாளான நாளை 100 மற்றும் 110 தடைதாண்டி ஓட்டப் போட்டிகளில் இலங்கையின் லக்ஷிக சுகந்தி மற்றும் தம்மிக்க ரணதுங்க ஆகியோர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM