ஓமந்தை,வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத் தெரிவில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின் முடிவு எட்டப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வவுனியாவில் இருந்து சென்ற விசேட குழுவிடம் தெரிவித்துள்ளதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியில் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா அல்லது தாண்டிக்குளத்திலா அமைப்பது என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, எம்.பி.நடராஜா, இ.இந்திராசா, வடமாகாண சுகாதார அமைச்சின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ, வர்த்தக சங்க பிரதிநிதிகளான த.இராசலிங்கம், புலேந்திரன் ஆகியோர் நேற்று முன்தினம் வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து குறித்த குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன்போது குறித்த விடயம் தொடர்பில் தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும், வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இந்த பொருளாதார மத்திய நிலையத்திற்கான நிதி திரும்பிச் செல்லாது, வவுனியா மாவட்டத்திலேயே பயன்படுத்தப்படும் என தெரிவித்த முதலமைச்சர் நாளை 28 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கும் போது ஓமந்தையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்ததாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையம்; ஜனாதிபதியின் சந்திப்பின் பின் முடிவு
Published By: Raam
27 Apr, 2016 | 09:16 AM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM