நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக செயற்படுவோர்  தேச துரோகிகள் -ரோஹித அபேகுணவர்தன 

Published By: Vishnu

20 May, 2019 | 03:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக செயற்படுவர்கள்  தேச துரோகிகளாகவே மக்களால் அடையாளப்படுத்தப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிப்பெற்றாலும் , தோல்வியடைந்தாலும் அது ஐக்கிய  தேசிய கட்சிக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் அதாவது பிரேரணை வெற்றிப் பெற்றால்  ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவாக  செயற்படும் மேலும் 05  பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் இழக்கநேரிடும். இதனால்  ஆட்சி கவிழ்ப்பு  ஏற்படும்.

மறுபுறம் பிரேரணை தோல்வியடைந்தால் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தவர்களும்   மக்களால் தேசதுரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவார்கள்.  இதன்பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்  என்று  கருதும் அளவிற்கு  மக்கள்  பாடம் புகட்டுவார்கள்.

எதிர்தரப்பினர்  விடயத்தில் மாத்திரமே   பாதுகாப்பு துறையினர் முறையாக செயற்படுகின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களான   பியல்  நிஷாந்த  சில்வா மற்றும்  தயாசிறி ஜயசேகர ஆகியோர்  விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். 

ஆனால் இதுவரையில்  நீதித்துறைக்கு அவப்பெயரினை ஏற்படுத்திய   மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி  மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக  இதுவரையில் எவ்வித  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04