இம்மாதம் 21 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் நாட்டில் ஏற்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் அனைத்து மக்களுக்கும் வலுவான முறையில் இந்த வேலைத்திட்டத்துடன் இணைந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
நாட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
இன்று 20ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை 21ஆம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று அன்றாட செயற்பாடுகளை வழமையான முறையில் முன்னெடுக்குமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு கூடுதலான பொறுப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM