இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல்  பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் - கனே­டிய பிர­தமர்

Published By: Vishnu

20 May, 2019 | 10:31 AM
image

இலங்­கையில் அர்த்­த­முள்ள வகையில் பொறுப்­புக்­கூறல்  பொறி­முறை உரு­வாக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளினால் நம்­பக்­கூ­டிய வகை­யி­லான பொறுப்புக் கூறல் பொறி­மு­றைமை ஒன்றை இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்த வேண்டும்  என்று  கனே­டிய பிர­தமர் ஜஸ்ரின் ட்ரூடோ வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இலங்­கையில் யுத்தம் நிறை­வ­டைந்து பத்து ஆண்­டுகள் பூர்த்­தி­யா­வ­தனை முன்­னிட்டு வெளி­யிட்­டுள்ள காணொளி ஒன்­றி­லேயே கனே­டிய பிர­தமர் ஜஸ்ரின் ட்ரூடோ இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். 

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

 26 ஆண்­டு­க­ளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக முடி­வுக்கு வந்­தி­ருந்­தது. முள்­ளி­வாய்க்­காலில் இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போதும் அதற்கு முன்­னரும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் கொல்­லப்­பட்­ட­துடன், பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளார்கள். யுத்தம் நாடு முழு­வ­திலும் ஆறாத வடுக்­களை ஏற்­ப­டுத்திச் சென்­றுள்­ளது.

கடந்த ஒரு தசாப்த கால­மாக யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட தமிழ் கனே­டி­யர்கள் பலரை தனிப்­பட்ட ரீதியில் சந்­தித்து, அவர்­களின் வலிகள் வேத­னை­களை கேட்­ட­றிந்­து­கொண்­டுள்ளேன்.

தமிழ்க் கனே­டி­யர்­க­ளு­டனான சந்­திப்­புக்­களின் ஊடாக இலங்­கையில் சமா­தா­னத்­தையும், நல்­லி­ணக்­கத்­தையும் நிலை­நாட்­டு­வது மிக நீண்ட பயணம் என்­ப­தனை புரிந்து கொண்டேன்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளினால் நம்­பக்­கூ­டிய வகை­யி­லான பொறுப்புக் கூறல் பொறி­மு­றைமை ஒன்றை இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்த வேண்­டு­மென கோரிக்கை விடுக்­கின்றேன்.

சர்­வ­தேச மற்றும் உள்­நாட்டு ரீதியில் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வகையில் இந்த பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றைமை அமைய வேண்டும்.

யுத்தம் கார­ண­மாக சொந்­தங்­களை இழந்த, பல்­வேறு வழி­களில் இழப்­புக்­களை எதிர்­நோக்­கிய மற்றும் பாதிப்­புக்­குள்­ளான அனை­வ­ருக்கும் கனே­டிய அர­சாங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்­கல்­க­ளையும் வருத்­தத்­தையும் வெளி­யிட்டுக் கொள்­கின்றேன்.

அண்­மையில் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தீவி­ர­வாத தாக்­கு­தல்­க­ளையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அனைத்து மக்­களும் தங்­க­ளது நம்­பிக்­கை­களின் ஊடாக வழி­பா­டு­களில் ஈடுபடக்கூடிய சுதந்திரம் இருக்க வேண்டும்.

கன­டாவின் வளர்ச்­சிக்கு தமிழ் கனே­டி­யர்கள் வழங்கி வரும் பங்­க­ளிப்­புக்­களை அனைத்து கனே­டி­யர்­களும் அங்­கீ­க­ரிக்க வேண்­டு­மென இந்த சந்­தர்ப்­பத்தில் கோரு­கின்றேன்’ எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22