இந்திய பாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் இன்று மாலை வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பா.ஜ.க 300 க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.
இந்தியாவின் 17 வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக (தமிழ்நாட்டின் வேலூர் பாராளுமன்ற தொகுதியை தவிர) நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பிரபல ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
அவ்வகையில், ரிப்பப்ளிக் டி.வி. மற்றும் ஜன்கிபாத் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் பா.ஜ.க கூட்டணி 287 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களிலும், இதர கட்சிகள் 127 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
இதேபோல், டைம்ஸ் நவ் மற்றும் சி.என்.எக்ஸ். நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பா.ஜ.க கூட்டணி 306 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களிலும், இதர கட்சிகள் 104 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
மேலும், நியூஸ் எக்ஸ் மற்றும் இந்தியா நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பா.ஜ.க கூட்டணி 298 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 118 இடங்களிலும், இதர கட்சிகள் 126 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM