(நா.தனுஜா)
ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கான வாய்ப்பாக ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.
தேர்தலைப் பிற்போடுவதற்கு முயற்சித்தல் அல்லது அரசாங்கத்தின் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் என்பன ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியிருக்கின்றார்.
எனவே அரசியலமைப்பை மீறி தேர்தலைப் பிற்போடுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. மக்களின் ஜனநாயக உரிமைக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் நினைத்தும் பார்க்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களை தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று அரசியல்வாதிகள் பகிரங்கமாகக் கூறி வந்தாலும் கூட, இதனூடாக தத்தமது அரசியல் நோக்கங்களை மறைமுகமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு எவரும் முயற்சிக்கவில்லை என்றும் கூறமுடியாது.
இந்நிலையிலேயே குண்டுத்தாக்குதல்களை ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கான கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து தற்போது நாட்டில் பாரிய சிக்கல் நிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் வெகுவாக அச்சமடைந்திருக்கின்றார்கள்.
இந்நிலையிலிருந்து மக்கள் மீட்டெடுப்பதற்கு அவர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்.
அந்தவகையில் ஒட்டுமொத்த நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவத்றகு அரசாங்கத்திடம் முறையான திட்டமிடலொன்று இருக்க வேண்டும்.
மக்களை பழைய நிலைக்கு திருப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கும் அதேவேளை, சர்வதேசத்துடனும் தொடர்புகளைப் பேணும் வகையில் மற்றொரு திட்டம் அவசியம் என அவர் தெரிவித்தருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM