(லியோ நிரோஷ தர்ஷன்)
தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்கும் போராட்டத்தின் ஆரம்பமாக கருதி அனைத்து இன மக்களும் எதிர்வரும் மே தின நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அறைகூவல் விடுத்தார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்திர் கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் மாநாடு இன்று இடம்பெற்றது.
இதன் போது உரையாற்றுகையிலேயே முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சர்வதேச நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளுக்கு அடிப்பணிந்து இலங்கையை மீண்டும் மேற்குலகத்தின் காலணித்துவமாக மாற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அத்துடன் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிப்பணிந்து நாட்டை கடன் சுமையில் தள்ளி விட்டுள்ளதுடன் இவற்றின் பின்னிலையில் இருந்து அமெரிக்காவே செயற்படுகின்றது.
இந்த ஆபத்துகள் தொடர்பில் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
எனவே, எதிர்வரும் மே தினத்தை தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்கும் போராட்டத்தின் ஆரம்பமாக கருதி அனைத்து இன மக்களும் மேதின நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM