அமைதியை சீர்க்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தால் கடும் தண்டனை - ருவான்  குணசேகர  

Published By: R. Kalaichelvan

17 May, 2019 | 07:27 PM
image

(ஆர்.விதுஷா)

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் வன்முறையை  தூண்டும் வகையிலுமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில்  பதிவேற்றம்  செய்பவர்களுக்கு எதிராக  கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பொலிஸ்  அத்தியட்சகர் ருவான் குணசேகர  தெரிவித்தார். 

தற்போது நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது.  

இவ்வாறாக  அமைதியை பேணுவதற்கு உதவிய  பலர் உள்ளனர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்  .இதேவேளை,அமைதியை  சீர்குலைக்கும்  வகையிலான செயற்பாடுகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவர்கள்  தொடர்பில் விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

 இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.   

அத்துடன்,வன்முறையை  தூண்டும் வகையிலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் தொடர்பில்  விசாரணைகளை  மேற்கொள்ளப்படுவதற்காக  பொலிஸ்  தலைமையகத்தினால் விசேட  பொலிஸ்  குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் தொடர் பரிசோதனை நடவடிக்கைகளில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.      

ஆகவே,இத்தகைய வன்முறையைதூண்டும் வகையிலாக  சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் தொடர்பில் முதலில்   கண்டறியப்பட்டவுடன்  பரிசோதனை நடவடிக்கைகளுக்கு  பின்னதாக  மேலதிக விசாரணைகளுக்காக  அவ்வாறன  பதிவுகளை  சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வோர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேலதிக  விசாரணைகளுக்கு  உட்படுத்தப்படுவர் எனவும்  தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08