(ப.பன்னீர்செல்வம்)
திருடர்களை பாதுகாக்கும் திருடர் கும்பலின் மே தினக் கூட்டம் கிருலப்பனையில் நடைபெறவுள்ளது. இதில் மக்களை ஏமாற்ற பல நாடகங்கள் அரங்கேறப்படவுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,
ஐக்கிய தேசியக் கட்சியினதும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் நல்லாட்சி மே தினக்கூட்ம் கொழும்பிலும், காலியிலும் நடைபெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு கூறினார்.
கொழும்பிலும், காலியிலும் உழைக்கும் வர்த்தகர்களுக்கான நல்லாட்சியின் மே தினமாக நடத்தப்படுகிறது. அதேவேளை ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கவும், திருடர்கள் கூடத்தின் மே தினம் கிருலப்பனையில் நடத்தப்படவுள்ளது.
இக் கூட்டத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக பல நாடகங்கள் அரங்கேற்றப்படவுள்ளன. திருடர் கூட்டத்தின் நாடகங்களுக்கெல்லாம் மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள் என்றும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM