கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை முன்னிட்டு அல் வக்ராவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு நேற்றிரவு திறக்கப்பட்ட அல் ஜனூப் விளையாட்டரங்கில் நடைபெற்ற அமிர் கிண்ண இறுதிப் போட்டியில் அல் சாத் கழகத்தை 4 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட அல் துஹெய்ல் கழகம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
போட்டியின் 7ஆவது நிமிடத்தில் அல் சாத் கழகம் சார்பாக அக்ரம் அலி கோல் ஒன்றைப் போட்டு தனது கழகத்தை முன்னிலையில் இட்டார். இவர் அல் துஹெய்ல் கழகத்தில் விளையாடும் யெஹியாவின் சகோதரர் ஆவார்.
எனினும் 9 நிமிடங்கள் கழித்து அல் துஹெய்ல் சார்பாக யெஹியா கோல் நிலையை சமப்படுத்தினார்.
அதன் பின்னர் இரண்டு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.
போட்டியின் 55 ஆவது நிமிடத்தில் தரிக் சல்மானுக்கு மத்தியஸ்தர் அல் ஜஸிம் சிவப்பு அட்டைக் காட்ட அல் சாத் கழகம் 10 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
அடுத்த ஆறு நிமிட இடைவெளியில் மொரோக்கோ நாட்டவரான எட்மில்சன் இரண்டு கோல்கைளப் (59 நி., 62 நி.) போட்டு அல் துஹெய்ல் அணியை முன்னிலையில் இட்டார். போட்டியின் 81ஆவது நிமிடத்தில் எட்மில்சன் தனது மூன்றாவது கோலைப் போட்டு அல் துஹெய்ல் கழகம் சம்பியனாவதை உறுதி செய்தார்.
இதேவேளை, 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தவுள்ள கத்தார் மேலும் 6 புதிய விளையாட்டு அரங்குகளை நிர்மாணித்து வருகின்றது.
அவற்றில் அல் பெய்த் அரங்கு வருட இறுதியில் திறக்கப்படவுள்ளது.
மற்றைய ஐந்து விளையாட்டரங்குகள் அடுத்த வருடம் பூர்த்தியாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM