இன்னலுக்குள்ளாகியிருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்

Published By: Digital Desk 3

17 May, 2019 | 11:46 AM
image

இலங்­கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற கொடூ­ர­மான குண்­டுத்­தாக்­கு­தல்கள் பயங்­க­ரத்­திற்கு எதி­ரான உல­க­ளா­விய போர் தொடர்­பி­லான விவா­தத்தை மீண்டும் மூள வைத்­தி­ருக்­கி­றது. அந்தத் தாக்­கு­தல்­க­ளுக்கு இஸ்­லா­மிய அரசு இயக்கம் உரிமை கோரி­யி­ருக்கும் நிலையில் சிரி­யா­வி­லி­ருந்த இஸ்­லா­மிய அரசின் முன்னாள் இராச்­சி­யத்­துடன் இலங்கைக் குண்­டு­தா­ரி­க­ளுக்கு இருந்த தொடர்­புகள் குறித்து உலகம் பூரா­க­வு­முள்ள கல்­வி­மான்­களும், அதி­கா­ரி­களும் ஆராய்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். குண்­டு­தா­ரி­களில் குறைந்­தது இரு­வ­ரா­வது சிரி­யா­விற்குச் சென்று வந்­தார்­க­ளென்று நம்­பப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களின் உல­க­ளா­விய பரி­மா­ணங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தற்­போது பல தலை­வர்கள் அழைப்பு விடுத்­துள்­ளனர். இலங்கைத் தாக்­கு­தல்கள் பயங்­க­ர­வாதம் மீதான உல­க­ளா­விய போரொன்றின் கோட்­பாட்டில் பல வெடிப்­புக்கள் ஏற்­பட்­டி­ருப்­பதை அடிக்­கோ­டிட்டுக் காட்­டு­வ­துடன், இது கால­வ­ரையில் அந்தப் போரினால் சாதித்­தி­ருக்­கக்­கூ­டி­யவை குறித்து பல்­வேறு கேள்­வி­களைக் கிளப்­பவும் செய்­கின்­றன. 2001 செப்­டெம்பர் 11 இல் அமெ­ரிக்­காவின் நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய நக­ரங்­களில் பயங்­க­ர­வா­திகள் மேற்­கொண்ட விமானத் தாக்­கு­தல்­களை அடுத்து அன்­றைய ஜனா­தி­பதி ஜோர்ஜ்.டபிள்யு.புஷ் தான் பயங்­க­ர­வாதம் மீதான போரென்ற புதுச்­சொல்லைப் புனைந்­த­வ­ராவார்.

தடு­மாற்­ற­மான போர்

முத­லா­வ­தாக பயங்­கரம் மீதான போரென்று பெய­ரி­டப்­பட்ட முதன்­மு­த­லான இரா­ணுவ நட­வ­டிக்­கையே தடு­மாற்­ற­மா­ன­தாக அமைந்­தி­ருக்­கி­றது. ஆப்­கா­னிஸ்­தானில் பயங்­க­ர­வா­தத்தை முடி­விற்குக் கொண்டு வரு­வ­தற்­கென முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலை­பே­றான சுதந்­தி­ரத்­திற்­கான நட­வ­டிக்­கைக்கு சுமார் 60 நாடுகள் அவற்றின் படை­களை அனுப்­பி­ய­துடன், இரா­ணுவ தள­பாட ஆத­ர­வையும் வழங்­கின. அமெ­ரிக்கா தலை­மை­யி­லான அந்த 60 நாடுகள் கூட்­ட­ணியின் இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் ஆப்­கா­னிஸ்­தானில் பயங்­க­ர­வா­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வரத் தவ­றி­விட்­டன. 2001 டிசம்­பரில் தோற்­க­டிக்­கப்­பட்ட ஒடுக்­கு­முறை தலிபான் ஆட்­சியின் கையி­லேயே ஆப்­கா­னிஸ்தான் மீண்டும் விழுந்­து­விடும் சூழ்­நிலை தோன்­றி­யி­ருக்­கி­றது. அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­டணி நாடு­களின் படைகள் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து வெளி­யே­றி­யதும் பாகிஸ்­தானில் தங்­க­ளது புக­லி­டங்­க­ளி­லி­ருந்து செயற்­படும் பயங்­க­ர­வாதக் குழுக்கள் எல்லை கடந்து சென்று ஆப்­கா­னிஸ்­தா­னுக்குள் அனர்த்­தங்­களை விளை­விக்­க­மாட்­டாது என்­ப­தற்கு எவ்­வித உத்­த­ர­வா­தமும் இல்லை.

பயங்­க­ர­வாதம் மீதான போரின் பெயரில் அமெ­ரிக்கா தலை­மையில் அமைக்­கப்­பட்ட பல கூட்­ட­ணி­களில் ஒன்று மாத்­தி­ரமே ஆப்­கா­னிஸ்­தானில் போரை நடத்­தி­யது. 2003 ஆம் ஆண்டில் ஈராக்கில் சதாம் ஹுசைனை வீழ்த்­து­வ­தற்கு அமைக்­கப்­பட்ட கூட்­ட­ணியில் 46 நாடுகள் இணைந்து கொண்­டன. 2011 ஈல் லிபி­யாவில் கேர்ணல் மும்மர் கடா­பியை அதி­கா­ரத்­தி­லி­ருந்து தூக்­கி­யெ­றிந்த கூட்­ட­ணியில் 19 நாடுகள் அங்கம் வகித்­தன.

2011 இல் மேற்­கா­சி­யாவில் வெடித்த அரபு வசந்தம்" அமெ­ரிக்­கா­வி­னதும், அதன் நேச நாடு­க­ளி­னதும் கவ­னத்தைத் திசை திருப்­பி­விட்­டது. அதன் விளை­வாக அந்த நாடுகள் சிரி­யாவில் ஜனா­தி­பதி பஷார் அல்-­அ­ஸாத்­திற்கு எதி­ரான குழுக்­களை வலுப்­ப­டுத்த ஆரம்­பித்­தன. இது இறு­தியில் சிரி­யா­விலும், ஈராக்­கிலும் உள்ள பிராந்­தி­யங்­களில் இஸ்­லா­மிய அரசு இயக்கம் அதன் இராச்­சி­யத்தை நிறு­வு­வ­தற்கு வழி­வ­குத்­தது. அத­னை­ய­டுத்து இஸ்­லா­மிய அரசின் பயங்­க­ரத்தை எதிர்த்துப் போரி­டு­வ­தற்கு அடுத்த கூட்­டணி அமைக்­கப்­பட்­டது.

வரு­டாந்தம் இடம்­பெற்ற உல­க­ளா­விய பயங்­கர தாக்­கு­தல்­களின் எண்­ணிக்கை 2004 ஆம் ஆண்டில் ஆயி­ர­மாக இருந்­தது. அந்த எண்­ணிக்கை 2014 இல் 17 ஆயி­ர­மாக உயர்ந்­தது. 

(1970–2018) வரை­யான நிகழ்­வுகள் தொடர்பில் மேரிலாண்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தால் பேணப்­பட்ட உல­க­ளா­விய பயங்­க­ர­வாதம் குறித்த தர­வு­க­ளி­லி­ருந்து பெறப்­பட்ட புள்­ளி­வி­பரம்) அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­டணி நாடுகள் பயங்­க­ரவாதத்­திற்கு எதி­ராக இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட நாடு­க­ளான ஆப்­கா­னிஸ்தான், சிரியா, லிபியா மற்றும் ஈராக் ஆகி­யவை பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­த­லி­லி­ருந்து விடு­பட்­ட­வை­யாக இல்லை என்­பதே தெளி­வா­கின்­றது. சிரி­யா­விற்கும், ஈராக்­கிற்கும் இடைப்­பட்ட பிராந்­தி­யத்தில் இஸ்­லா­மிய அரசு நிறுவி வைத்­தி­ருந்த இராச்­சியம் தோற்­க­டிக்­கப்­பட்ட போதிலும் அந்த இயக்­கமும், அதன் சார்புக் குழுக்­களும் உல­கத்தின் புதிய பாகங்­களில் இப்­பொ­ழுது காணப்­ப­டு­கின்­றன. அந்தப் பட்­டி­யலில் தற்­போது இலங்­கையும் இடம்­பெற்­றுள்­ளது.

இரண்­டா­வ­தாக தனி இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதக் குழுக்­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்­திற்கு உத­வு­வ­திலும் பார்க்க பயங்­க­ர­வா­தத்தின் மீதான இந்தப் போர் இஸ்­லா­மிய அரசு இயக்­கத்­திற்கும், அல்-­கைதா இயக்­கத்­திற்­குமே கூடு­த­லாக உத­வி­யி­ருக்­கி­றது போல் தெரி­கி­றது. அதா­வது அந்த இயக்­கங்­களின் உண்­மை­யான ஆற்­றல்­க­ளுக்குப் பொருத்­த­மில்லா அளவு பெரி­ய­தொரு ஆதிக்­க­நிலைத் தோற்­றப்­பாட்டைக் கொடுத்­தி­ருக்­கி­றது. அது உல­க­ளா­விய ரீதியில் முஸ்லிம் இளை­ஞர்­களை அந்த இயக்­கங்கள் அணி சேர்க்­கவும், தீவி­ர­வாத மயப்­ப­டுத்­தவும் உத­வி­ய­துடன் தங்­க­ளது பயங்­க­ர­வா­தி­களை உலகம் பூரா­கவும் வைத்­தி­ருக்­கக்­கூ­டிய நிலை உரு­வா­னது. இதனை இஸ்­லா­மிய அரசு இயக்­கத்தின் தலைவர் அண்­மையில் வெளி­யிட்ட வீடி­யோவில் அவ­ரது உரை மூலம் விளங்­கிக்­கொள்ள முடி­கி­றது.

இஸ்­லாத்­துக்­கான போராட்­ட­மல்ல

மூன்­றா­வ­தாக இஸ்­லாத்­துக்­கான போராட்டம்" என்ற கருத்­து­ரு­வாக்­கத்தை அவர்கள் கட்­டி­வ­ளர்த்­தி­ருப்­பதும் தவ­றா­னதே. உல­க­ளா­விய பயங்­க­ர­வாதத் தர­வு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்­கு­கையில் 2001ஆம் ஆண்­டுக்குப் பிறகு நூற்­றுக்கும் அதி­க­மா­ன­வர்கள் கொல்­லப்­பட்­டனர். (அதி­க­ள­வான உயி­ரி­ழப்­புக்கள்) 81 பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களில் 70 இற்கும் அதி­க­மா­னவை இஸ்­லா­மிய நாடு­களில் அல்­லது முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட நாடு­க­ளி­லேயே நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. 2001 இற்குப் பிறகு பெரு­ம­ளவில் உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்ட மத நிறு­வ­னங்கள் மீதான தாக்­கு­தல்­களைப் பொறுத்­த­வரை பட்­டி­யலில் அதி­யு­ய­ரத்­தி­லி­ருக்கும் 20 தாக்­கு­தல்­களில் 18 தாக்­கு­தல்கள் இஸ்­லா­மியக் குழுக்­க­ளினால் பள்­ளி­வா­சல்கள் மீதே நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

அதனால் பயங்­க­ரத்­திற்கு எதி­ரான போரென்­பது பெரும்­பாலும் தனி இஸ்­லா­மியக் குழுக்­க­ளினால் பிர­சா­ரப்­ப­டுத்­தப்­படும் ஒரு கோட்­பா­டா­கவும் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்­கான நோக்­கத்­திற்­கான ஏனைய மதங்­களைச் சேர்ந்த தீவி­ர­வா­தி­களால் பிர­சா­ரப்­ப­டுத்­தப்­படும் கோட்­பா­டா­கவும் தோன்­று­கி­றது. ஏனைய மதங்­களைச் சேர்ந்த தீவி­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்கு முனைப்­பான உதா­ர­ணங்­க­ளாக நோர்­வேயின் உடோயா தீவில் 2011 இல் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் அல்­லது இவ்­வ­ருடம் மார்ச்சில் நியூ­சி­லாந்தின் பள்­ளி­வா­சலில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களைக் கூறலாம். பயங்­க­ர­வா­தி­களால் பாதிக்­கப்­படும் நாடு­களின் அர­சாங்­கங்கள் மேற்­கூ­றப்­பட்ட இக்­கோட்­பாட்டை கண்ணை மூடிக்­கொண்டு ஏற்­றுக்­கொள்ளக் கூடாது.

உதா­ர­ண­மாக இலங்­கையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்­கத்தின் உறுப்­பி­னர்கள் அவர்­களின் கொடிய சதித்­திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­த­தற்குக் காரணம் இந்­தி­யா­வினால் வழங்­கப்­பட்ட புல­னாய்வுத் தக­வல்­களை இலங்கை அர­சாங்கம் அலட்­சியம் செய்­த­மையே ஆகும். விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்த பிறகு இலங்கை அர­சாங்கம் பாது­காப்பு விட­யத்தில் சற்றே மெத்­த­னப்­போக்கைக் கடைப்­பி­டித்­த­துடன், மறு­பு­றத்தில் உள்­ளுக்­குள்­ளாக வளர்ந்து வந்த வெடிப்­புக்­களைக் கவ­னிக்கத் தவ­றி­விட்­டது. அதன் விளை­வாக ஈஸ்டர் ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தாரி என்று சந்­தே­கிக்­கப்­படும் மொஹமட் சஹ்ரான் காசீம் கிழக்கு மாகா­ணத்தின் பள்­ளி­வா­சல்­களில் செய்த பிர­சங்­கங்கள் பற்­றிய முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்ட போதிலும் கூட, அவரால் தொடர்ந்து செயற்­படக் கூடி­ய­தாக இருந்­தி­ருக்­கின்­றது. மத்­திய கிழக்கில் இஸ்­லா­மிய அரசு பிராந்­தி­யத்­திற்கு 32 இலங்­கை­யர்கள் மாத்­தி­ரமே சென்று வந்­த­தாக நம்­பப்­ப­டு­கின்ற போதிலும், தேசிய தௌஹீத் ஜமாஅத் குண்­டு­தா­ரிகள் மீது கடு­மை­யான கண்­கா­ணிப்பை மேற்­கொள்ள இலங்கைப் பொலி­ஸாரும், புல­னாய்வுப் பிரி­வி­னரும் தவ­றி­விட்­டனர்.

பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போராட்­டத்தின் அணு­கு­மு­றைகள்

நான்­கா­வ­தாக பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராகப் போராடும் நாடு­களைப் பொறுத்­த­வரை அவை தங்­க­ளது அனு­ப­வங்­களைப் பொதுப்­ப­டை­யாக்­கு­வ­தற்கு முயற்­சிப்­பதை விடுத்து, தங்­க­ளுக்­கி­டை­யி­லான வேறு­பா­டு­க­ளி­லி­ருந்து நெருக்­க­மான படிப்­பி­னை­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். நூற்­றுக்­க­ணக்­கான முஸ்லிம் குடி­யேற்­ற­வா­சிகள் இஸ்­லா­மிய அரசு இயக்­கத்தில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்ட ஐக்­கிய இராச்­சியம், பிரான்ஸ் மற்றும் பெல்­ஜியம் போன்ற நாடு­களை ஒப்­பிடும் போது சொற்ப எண்­ணிக்­கை­யா­னோரே சிரி­யா­விற்குச் சென்­ற­தாக நம்­பப்­ப­டு­கின்­றது. இஸ்­லா­மிய அர­சிடம் பயிற்சி பெற்­று­விட்டு திரும்பி வந்­த­வர்­களை தீவி­ர­வா­த­மயப் போக்­கி­லி­ருந்து விடு­படச் செய்­வதில் பெரு­ம­ள­விற்குத் தாங்கள் வெற்­றி­கண்­டி­ருப்­ப­தா­கவும் இந்­திய அதி­கா­ரிகள் உரிமை கோரு­கின்­றார்கள். இதற்குக் காரணம் தீவி­ர­வா­த­மய நீக்க செயற்­பா­டு­களில் இந்த இஸ்­லா­மிய அரசு உறுப்­பி­னர்­களின் முழுக் குடும்­பங்­க­ளையும், அய­ல­வர்­க­ளையும், உள்ளூர் மௌல­வி­க­ளையும் சேர்த்துக் கொண்­ட­மையே ஆகும்.

பங்­க­ளா­தேஷில் கூட 2016 இல் ஹோலி ஆட்­டிஸன் பேக்­கரி மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்குப் பிறகு தாய்­மார்கள் தங்­க­ளது பிள்­ளை­களின் நட­வ­டிக்­கை­களை உன்­னிப்­பாகக் கண்­கா­ணிக்க வேண்­டு­மெனக் கோரி அர­சாங்கம் விளம்­ப­ரங்­களைச் செய்­தது. தீவி­ர­வாத மயப்­ப­டுத்­தப்­பட்ட பயங்­க­ர­வா­திகள் ஒரு சமூ­கத்தின் அங்கம் என்று ஏற்­றுக்­கொள்ளும் இந்தப் போக்கு பல ஐரோப்­பிய நாடு­களில் தற்­போது மூண்­டி­ருக்கும் விவா­தத்­திற்கு முற்­றிலும் முர­ணா­ன­தாக இருக்­கின்­றது. இஸ்­லா­மிய அர­சுடன் சேர்ந்து இயங்­கி­விட்டு மத்­திய கிழக்­கி­லி­ருந்து திரும்­பு­கின்­ற­வர்­க­ளையும், அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரையும் திரும்ப ஏற்­றுக்­கொள்­வ­தற்கு இந்த ஐரோப்­பிய நாடுகள் மறுக்­கின்­றன.

அதே­போன்றே பல மத்­திய ஆசிய அர­சுகள் தாடி வளர்ப்­ப­தையும், ஹிஜாப் அணி­வ­தையும் தடை செய்­வதன் மூலம் தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ரான கடு­மை­யான அணு­கு­மு­றை­களைக் கடைப்­பி­டிக்கும் அதே­வேளை, சீனாவில் சின் ஜியாங் மாகா­ணத்தில் நடை­மு­றையில் இருக்­கின்ற மீள்­போ­தனை முகாம்கள் மனித உரி­மைகள் பற்­றிய பல கேள்­வி­களைக் கிளப்­பு­கின்­றன. இந்த அணு­கு­மு­றை­களை வேறெங்­கா­வது பிர­யோ­கிப்­பது குறித்துத் தீர்­மா­னிப்­ப­தற்கு முன் அவற்றின் வெற்றி அல்­லது தோல்வி குறித்து ஆராய வேண்டும்.

ஐந்­தா­வ­தாக பயங்­கரம் மீதான போரி­லுள்ள முரண்­பா­டு­களை உலக சமு­தாயம் சரி­யாக அடை­யா­ளங்­கண்டு கையாள வேண்டும். இரு­பது வரு­டங்­க­ளாக பயங்­க­ர­வா­தத்­துக்­கான  பொது­வான வரை­வி­லக்­கணம் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையில் உலகம் இணக்­க­மொன்றைக் காணத் தவ­றி­யி­ருக்­கி­றது. இதனால் சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் மீதான விரி­வான சாச­ன­மொன்றைக் கொண்டு வரு­வ­தற்கு இந்­திய அனு­ச­ர­ணை­யுடன் முன்வைக்கப்பட்ட யோசனை இன்னும் நிறைவேற்றப்படாமல் தடங்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.பாகிஸ்தானில் ஜாயிஷ்-இ-மொஹம்மட் இயக்கத்தின் தலைவர் மசுத் அஸ்கர் பல வருடங்களாக இடையறாது இந்தியர்களை இலக்குவைத்து வருகின்ற போதிலும்கூட அவரை ஒரு உலக பயங்கரவாதி என்று பிரகடனம் செய்யும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தில் இந்தியாவில் அவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பற்றிக்குறிப்பிடுவது தவிர்க்கப்பட்ட பின்னரே சீனா அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குத் தனது சம்மதத்தை வழங்கியது. இது ஏனென்று உலகம் கேட்க வேண்டும்.இஸ்லாமியப் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவியும், புகலிடமும் வழங்குகின்ற பாகிஸ்தான் மற்றும் சவூதிஅரேபியா போன்ற நாடுகள் இன்னமும் கூட பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னரங்கு நேச அணிகளாக நடத்தப்படுகின்ற அதேவேளை, உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அனுசரணை நாடாக ஈரானைப் பட்டியலிடுவதில் அமெரிக்கா ஏன் கவனம் செலுத்துகின்றது என்று உலகம் கேட்க வேண்டும்.அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் கூட்டணியிடம் பெரும் வளங்களும், நிபுணத்துவமும் இருந்தபோதிலும் கூட இலங்கையில் நேரவிருந்த அச்சுறுத்தலை உலகளாவிய புலனாய்வு அமைப்புக்களினால் ஏன் கண்டுகொள்ள முடியாமல் போனது? உலகம் இதுபோன்ற பிரச்சினைகளில் உண்மையில் ஐக்கியப்பட்டு முரண்பாடுகளுக்குத் தீர்வு காணாத பட்சத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் பலவீனமானதாக மாத்திரமே தொடரும்.

(த இந்து)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54