அரசாங்கத்தை அரசியல்வாதிகள் ஆள்வதைவிட  நாட்டிலுள்ள இராணுவத்தினர் பொறுப்பேற்றால் நல்லது என நினைக்கிறேன் ; அனுரகுமார

Published By: Digital Desk 4

16 May, 2019 | 11:33 PM
image

நாட்டில் கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் தற்பொழுது இனவாதத்தைத் தூண்டும் அரசியலே நாட்டில் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது மக்கள் மத்தியில் மேலும் உரையாற்றிய முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க,

இன்று மக்கள் மத்தியில் சந்தேகம், வைராக்கியம், விசுவாசம் போன்றவற்றைத் தூண்டும் செயற்பாடுகள் தான் தற்பொழுது நாட்டில் காணப்படுகிறது. ஊடகம் ஒன்றில் நான் ஒரு செய்தியைப் பார்த்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்து மஹிந்த ராஜபக்ஸ இருந்திருந்தால் பாதுகாப்பு செயலாளராக கோட்டாபே ராஜபக்ஸ இருந்திருந்தால் குண்டு தாக்குதலை மேற்கொண்ட எட்டு பேரையும் வெள்ளை வேனில் தூக்கி இருப்போம் என எழுதப்பட்டிருந்தது இந்த செய்தியின் ஊடாக என்ன தெரிய வருகிறது என்றால் வெள்ளை வேன் கலாச்சாரம் நல்லது எனது எழுதப்பட்டிருந்தது.

இந்த அரசாங்கத்தை அரசியல்வாதிகள் ஆள்வதைவிட இந்த நாட்டில் உள்ள இராணுவத்தினர் பொறுப்பேற்றால் நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் அப்போதுதான் இந்த நாட்டில் அனைவரும் சமாதானத்தோடு வாழ முடியும். அமைச்சர் ரிஷாட் பதியூதினை தாக்கினால் அனைவரும் வீரராவர்.

தாம் செய்கின்ற அநியாயங்கள் கொள்ளைகள் அனைத்தையும் மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணி தினந்தோறும் வரலாற்றுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற தாக்குதலுக்கு என்ன சொல்லுவது அந்த தாக்குதலுக்குப் பெயர்தான் இஸ்லாம் மத தீவிரவாத உமைத் அமைப்பு ஆகும்.

இடம்பெறுகின்ற தாக்குதல்களை நாம் சரிவர இனங்கண்டால் மாத்திரம் தான் யார் இந்த தாக்குதலை மேற்கொண்டார்கள் என எம்மால் இனங்காண முடியும். தாக்குதலை மேற்கொண்டவர்கள் எதற்காகக் கிறிஸ்தவ ஆலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் தெரிவு செய்து தாக்குதலை மேற்கொண்டனர். அரசாங்கத்தின் மீது உள்ள கோபம் அல்ல. வெளிநாடுகளோடு இருந்த கோபத்தின் காரணமாகத்தான் இந்த மூன்று இடங்களையும் தெரிவு செய்து தாக்குதலை மேற்கொண்டனர்.

வெளிநாடுகளில் உள்ள அரசியல்வாதிகளிடம் கோபத்தின் காரணமாகவே இலங்கை நாட்டில் தாக்குதலை மேற்கொண்டனர்.

பொதுமக்களுடைய பாதுகாப்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிகூடிய முதல் செலவிடப்படுகிறது. பாதுகாப்பு பிரிவினருக்கு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஆறு மாத காலப்பகுதியில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் முரண்பாடு ஏற்பட்டது.

கடந்த 21 ஆம் திகதிக்குப் பிறகு நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பிறகு பாதுகாப்பு தரப்பினரை நாங்கள் அதிகரிக்கவில்லை எனக் கூறுகிறார்கள்.

மக்களுடைய பாதுகாப்பு குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டு கொள்ளவில்லை. “தற்பொழுது கூறமுடியாது, எனக்குத் தெரியாது” எனக் கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்பு யார் தாக்குதலை மேற்கொள்ளப் போகிறார்கள் எந்த நேரம் என பல்வேறு தகவல்களைப் புலனாய்வுத் துறையினர் வழங்கியிருந்தார்கள்.

ஆனால் நாட்டின் தலைவர்கள் மக்களின் பாதுகாப்பு குறித்துக் கண்டுகொள்ளவில்லை. இன்று கூறுகிறார்கள். ரீஷாட் பதியூதின் செய்தது கொள்ளை இல்லை,  பசில் ராஜபக்ஷ செய்ததும் கொள்ளைதான். இலங்கையில் தாக்குதல் இடம்பெற்ற நாளில் நாட்டின் ஜனாதிபதி வெளிநாட்டிற்குச் சென்று தாக்குதல் இடம்பெற்ற மறுநாள் தான் வேறு ஒரு விமானத்தில் இலங்கை நாட்டுக்கு வருகை தந்தார்.

இதனை நாங்கள் எற்று கொள்ள முடியாது. நாட்டின் முப்படை தலைவர் ஜனாதிபதி தான். தாக்குதல் சம்பவம் இடம்பெற்றவுடன் வெளிநாடு சென்ற ஜனாதிபதி நாடு திரும்பியிருக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியினை இந்த அரசாங்கத்தினால் பிற்போடபட்டது.

அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 06 ஆம் திகதியும் 13ஆம் திகதியும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இருந்தாலும் பாடசாலைக்கு மாணவர்களின் வருகை குறைவாகத் தான் காணப்படுகிறது. உணவகங்களில் வியாபாரம் இல்லை. ஹோட்டல்களில் விருந்தினர்கள் இல்லை. எனவே இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எம்மிடம் இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04