கிழக்குமாகாண தமிழ் பாடசாலைகளில் சேவையாற்றிவரும் முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றிவரும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் செயற்பாடு தமிழ் மாணவர்களது கல்வியை பாதிப்படையச் செய்துள்ளது.
எனவே கிழக்கில் தமிழ் கல்வி வலயங்கள், பாடசாலைகளை மூடி பெற்றோர் வீதியில் இறங்க வேண்டிவரும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக நேற்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் .
வியாழேந்திரன் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல்.ஏ. எம்.ஹிஸ்புல்லாஹ் தீவிர நடவடிக்கையாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கின்ற முஸ்லிம் ஆசிரியர்களை உடனடியாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்துவருகின்றார்.
மட்டக்களப்பு , பட்டிருப்பு, கல்குடா மண்முனை மேற்கு என நான்கு தமிழ் கல்விவலயங்களில் மாகாண, தேசிய பாடசாலைகள் அடங்கலாக 252 முஸ்லிம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். இதில் கடந்த மூன்று நான்கு தினங்களில் 120 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு சென்றுள்ளனர்.
பட்டிருப்பு வலயத்திலே 123 ஆசிரியர் பற்றாக்குறையுள்ளதுடன் 61 முஸ்லிம் ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர். இதில் 18 முஸ்லிம் ஆசிரியர்கள் இடம்மாறிச் சென்றுள்ளனர். ஏனையவர்களும் செல்லவுள்ளனர். கல்விசாரா ஊழியர்கள் 12 பேரும் இவ்வாறு இடமாற்ற அனுமதி கேட்டுக்கொண்டிருக்கின்றனர்
அவ்வாறே மட்டக்களப்பு வலயத்தில் 32 முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். இதில் 9 ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். கல்குடா வலயத்தில் 71 ஆசிரியர்கள் வெளியேறியுள்ளனர். மண்முனை மேற்குவலயத்தில் 22 முஸ்லிம் ஆசிரியர்கள் வெளியேறியுள்ளனர். க.பொ.த. உயர்தரப்பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சை இடம்பெறவுள்ள நிலையிலும் 2 ஆம் தவணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் அதிபர் மற்றும் வலயகல்விப் பணிப்பாளரின் அனுமதியில்லாது இடமாற்றத்துக்கு அனுமதித்திருப்பது ஏற்புடையதல்ல. பொறுப்பில்லாது கிழக்கு மாகாண ஆளுநர் இனரீதியாக செயற்படுகின்றார்.
தமிழ் வலயங்களில் இருந்த ஆசிரியர் வெற்றிடங்களை காட்டி முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கி சிறிது காலத்தின்பின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தங்களுடைய பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறச் செய்கின்றனர். கிழக்கு மாகாண ஆளுநர் முஸ்லிம்களுக்கான ஆளுநரா ஒட்டு மொத்த கிழக்கு மாகாண மக்களுக்கு ஆளுநரா என சந்தேகம் ஏற்படுகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM