வன்முறை  சம்பவங்களுடன் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது - ரஞ்சித் மத்தும பண்டார 

Published By: Vishnu

15 May, 2019 | 07:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வடமேல் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கும் அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

நாட்டில்  பிரச்சினைகளை ஏற்படுத்தி அதனூடாக  சர்வாதிகார   ஆட்சியினை கொண்டு செல்லும் நோக்கம்  ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது.  ஏப்ரல்  21 ஆம்  திகதி  நடத்தப்பட்ட குண்டுதாக்குதல்  தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த  விசாரணைகள் 90 சதவீதம் முழுமையடைந்துள்ளது.

வடமேல் மாகாணத்தின் வன்முறை தொடர்பிலும்  முக்கியமான  தரப்பினர் 24  மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மறுபுறம் பொலிஸ் தரப்பினர் மீதும்  ஒரு சில விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டு  மக்கள் இந்த  நெருக்கடியான  நிலையில் முறையான தீர்மானங்களை   பொறுமையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44