யாழ். அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து ஆசிரியை ஒருவர் மீது இருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் இன்று புதன் கிழமை காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது பாடசாலைக்கு அருகில் ஒழுங்கை ஒன்றுக்கு அருகில் ஆசிரியைய வழிமறித்த இருவர் “ மாணவர்கள் இருவர் பாடசாலைக்கு செல்லாது ஒழுங்கைக்குள் நிற்கிறார்கள் “ என கூறியுள்ளனர்.
அதனை அடுத்து ஆசிரியை குறித்த ஒழுங்கைக்குள் சென்ற சமயம் பின் தொடர்ந்த இருவர் கத்தியால் ஆசிரியையின் முதுகு பகுதியில் கத்தியால் குத்தியதுடன் அவரின் சங்கிலியையும் அபகரிக்க முயன்றுள்ளனர்.
அதன் போது சுதாகரித்த ஆசிரியை அபாய குரல் எழுப்பியதுடன் ஒழுங்கைக்குள் இருந்து பிரதான வீதியை நோக்கி ஓடியுள்ளார். அதனை அடுத்து தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM