ஆசிரியை மீது கத்தியால் குத்தி சங்கிலி அறுக்க முயற்சி :யாழில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

16 May, 2019 | 06:21 AM
image

யாழ். அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து ஆசிரியை ஒருவர் மீது இருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் இன்று புதன் கிழமை காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது பாடசாலைக்கு அருகில் ஒழுங்கை ஒன்றுக்கு அருகில் ஆசிரியைய  வழிமறித்த இருவர் “ மாணவர்கள் இருவர் பாடசாலைக்கு செல்லாது ஒழுங்கைக்குள் நிற்கிறார்கள் “ என கூறியுள்ளனர். 

அதனை அடுத்து ஆசிரியை குறித்த ஒழுங்கைக்குள் சென்ற சமயம் பின் தொடர்ந்த இருவர் கத்தியால் ஆசிரியையின் முதுகு பகுதியில் கத்தியால் குத்தியதுடன் அவரின் சங்கிலியையும் அபகரிக்க முயன்றுள்ளனர்.

அதன் போது சுதாகரித்த ஆசிரியை அபாய குரல் எழுப்பியதுடன் ஒழுங்கைக்குள் இருந்து பிரதான வீதியை நோக்கி ஓடியுள்ளார். அதனை அடுத்து தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42