சட்ட விரோதமான முறையில் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு எடுத்துச் வர முயற்சித்த நோர்வே பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கஅதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வேயைச் சேர்ந்த 55 வயதான நகை கடை வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே தந்தையும் மகனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து 1 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான 1 கிலோ 825 கிராம் எடையுடைய தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இருவருக்கும் 6 இலட்சம் ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM