தெற்காசியாவில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இரண்டாவது உச்சபட்ச காரணியாக உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது. ஆனால் இது ஒரு நோயல்ல என்றும், இதுகுறித்து முழுமையான விழிப்புணர்வும், முறையான சிகிச்சையும் பெற்றால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ இயலும்.
இன்றைய சூழலில் நான்கில் மூன்று பேருக்கு உயர் குருதி அழுத்த பாதிப்பு இருக்கிறது. இதில் 45 சதவீதத்தினர் தான் பரிசோதனை செய்து கொண்டு, உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அதில் 8 சதவீத மக்கள் மட்டுமே உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையை பெற்றுக்கொண்டு, அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 15 வயது முதல் 49 வயதுவரை உள்ளவர்கள் இதைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வு பெறவில்லை என்றே சொல்லலாம்.
இரத்த அழுத்த பாதிப்பு இதய நோய் பாதிப்பையும், இரத்தக் குழாய் தொடர்பான பாதிப்பையும் ஏற்படுத்தும் முக்கிய காரணி என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அதே தருணத்தில் உயர் இரத்த அழுத்தம் ஒரு நோயல்ல என்றும், உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளில் சில குறைபாடுகள் இருக்கிறது என்பதற்கான அறிகுறியாக தான் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தலைசுற்றல், சுவாசித்தலில் இயல்பின்மை, தலைவலி, சோர்வு, நெஞ்சு வலி, படபடப்பு, மூக்கில் ரத்தம் வடிதல் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக இரத்த அழுத்தம் குறித்த பரிசோதனையை முழுமையாக மேற்கொண்டு அதற்கான சிகிச்சையையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையையும் உறுதியாக பின்பற்ற வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM