பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 359 என்ற வெற்றியிலக்கை துரத்தியடித்துள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஒரு இருபதுக்கு - 20, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இடம்பெற்று வருகிறது.
இதில் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று, இருபதுக்கு 20 தொடரை தனதாக்கியது.
கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 11 ஆம் திகதி இடம்பெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ஓட்டங்களினாலும் வெற்றிபெற்றது.
இந் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் பிரிஸ்டலில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 9 விக்கெட்டுக்களை இழந்து 358 ஓட்டங்களை குவித்தது.
ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான இமாம் உல்-ஹக் 131 பந்துகளில் 16 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்களாக 151 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். அவருக்கு அடுத்த படியாக ஆசிப் அலி 52 ஓட்டத்துடனும், ஹாரிஸ் செளஹேல் 41 ஓட்டத்தையும் அதிகபடியாக எடுத்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுக்களையும், டாம் குர்ரன் 2 விக்கெட்டுக்களையும், பிளங்கெட் மற்றும் டேவிட் வில்லி தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
359 என்ற பாரிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 359 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோனி பெயர்ஸ்டோ 93 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 15 நான்கு ஓட்டம் அடங்களாக 128 ஓட்டத்துடனும், ஜோசன் ரோய் 55 பந்துகளில் 4 ஆறு ஓட்டம், 8 நான்கு ஓட்டம் அடங்களாக 76 ஓட்டத்துடனும், ஜேய் ரூட் 43 ஓட்டத்துடனும், பென் ஸ்டோக்ஸ் 37 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், மொய்ன் அலி 46 ஓட்டத்துடனும், அணித் தலைவர் ஈயன் மொர்கன் 17 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஜூனைட் கான், இமாட் வஸீம் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரில் 5:2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான நான்காவது போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதியும், ஐந்தாவது போட்டி 19 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM