தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா மேலும் ஐந்து வருடங்களிற்கு நீடித்துள்ளது.
2014 இல் நீடிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இந்தியாவின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு விடுதலைப்புலிகளின் வன்முறை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஆபத்தானவையாக காணப்படுகின்றன என இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் இந்தியாவிற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றி வருவதுடன் இந்திய பிரஜைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதாக விளங்குவதால் அந்த அமைப்பை உடனடியாக சட்டவிரோதமானது என அறிவிக்கவேண்டியுள்ளது என இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
புலம் பெயர் தமிழர்கள் இணையங்கள் மூலம் தொடர்ந்தும் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகளை பரப்பிவருகின்றனர் விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்தியாவே காரணம் என தெரிவித்துவருகின்றனர் என தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சு இது இந்தியாவில் மிக மிகமுக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயமாக காணப்படுகின்றது எனவும் இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
2009 தோல்விக்கு பின்னரும் விடுதலைப்புலிகள் இன்னமும் ஈழம் என்பதனை கைவிடவில்லை நிதிசேகரிப்பு மற்றும் பிரச்சாரங்கள் மூலம் அந்த நோக்கத்தை நோக்கி இரகசியமாக செயற்படுகின்றனர் எனவும் இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் எஞ்சியுள்ள தலைவர்களும் உறுப்பினர்களும் அமைப்பிற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புத்துயிர் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM