பயிற்சியின் போது தலையில் பந்து அடிப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை கிரிக்கெட் வீரர் கௌஷால் சில்வா சிகிச்சைகள் நிறைவடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக, கண்டி பல்லேகலை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே, இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கௌஷால் காயமடைந்தார்.
உடனடியாக கண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக ஹெலிகொப்டர் மூலம் அவர் கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டார்.
கௌஷால் சில்வா விக்கெட்டுக்கு அருகே களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது, தினேஷ் சந்திமால் அடித்த பந்தே கௌஷாலின் தலையில் பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவருக்கு ஆபத்து ஏதுமில்லையென்று தெரிவித்தனர்.
ஆனாலும் கௌஷால் சில்வா இங்கிலாந்து தொடரில் கலந்துகொள்வாரா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தீர்மானிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வைத்தியர் குழு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி போட்டியில் கௌஷால் சில்வா சதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM