(எம்.மனோசித்ரா)
கொழும்பு - வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம்மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் இன்று திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதியை புனரமைத்து தருமாறு கோரிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்கும், வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்படுகின்றமைக்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிரதேசவாசியொருவர் கருத்து தெரிவிக்கையில்,
வீதியை புனரமைத்துத் தருமாறு கோரிய இளைஞரை கைது செய்துள்ளனர். ஆனால் வெடி குண்டு உற்பத்தி செய்யும் பாரிய தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டார்கள் எனக் கூறி இன்று அதிகாலை சிலரை கைது செய்து கூட்டிச் சென்றுள்ளார்கள். ஆனால் நாடளாவிய ரீதியிலுள்ள பல முஸ்லிம் பள்ளவாசல்களில் வாள்களும், கத்திகளும் மீட்கப்பட்டுள்ளன. அதனுடன் தொடர்புடையவர்கள் ஏன் கைதுசெய்யப்படவில்லை?
இந்த வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலை உடைக்கப்பட்டு அதிலுள்ள பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்னன. இது தொடர்பில் இந்த பொலிஸ் பிரிவிற்கான பொறுப்பதிகாரி எதுவும் தெரியாது எனத் தெரிவிக்கின்றார்.
எனவே இந்த பொறுப்பதிகாரி இங்கு தொடர்ந்தும் இருந்தால் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது. இன்னும் சோதனை செய்யப்பட வேண்டிய இடங்கள் பல காணப்படுகின்றன. அவை குறித்து தகவல் வழங்கியும் சோதனை மேற்கொள்ளப்படவில்லை. சோதனை செய்ததாக எம்மிடம் வந்து பொய் கூறுகின்றனர்.
எனவே ஜனாதிபதியும் பாதுகாப்பு துறையும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட வேண்டும். காரணம் இவர்கள் அரசியல்வாதிகளுக்கு சார்பாகவே வேலை செய்கின்றனர். எனவே தான் இவரை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
ஜனாதிபதி செயலாளர் அல்லது ஏனைய அதிகாரிகள் இங்கு வருகை தந்து நிலைமை தொடர்பாக ஆராய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அத்தோடு வீதி அபிவிருத்தி செய்து தரப்பட வேண்டும் எனக் கோரியதற்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் விடுவிக்கப்படும் வரை நாம் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடப்போவதில்லையெனத் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM