"பக்தர்களின் இரத்தம் இறைவனின் செவிகளில் ஓங்காரமிடும்": தாக்குதலை அறிந்­தி­ருந்தும் தடு­க்கா­த­வர்­க­ளுக்கு இறை­வனின் தண்­டனை உறுதி..!

Published By: J.G.Stephan

13 May, 2019 | 02:38 PM
image

(ஆர்.விதுஷா)

கடந்த ஈஸ்டர் ஞாயிறு  தினத்­தன்று பயங்­க­ர­வா­தி­களின் குண்­டுத் ­தாக்­கு­தல்கள் இடம் பெறக்­கூ­டிய ஆபத்து  இருக்­கின்­றது  என்ற தக­வல்­களை முன்­கூட்­டியே  தெரிந்­தி­ருந்தும் அதை அலட்­சி­யப்­ப­டுத்­தி­ய­மைக்கு நாட்டின் தலை­வரும் அதி­கா­ரி­களும் பொறுப்­புக்­கூற வேண்டும் என்று கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கை தெரி­வித்­துள்ளார்.  

கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்தில் இடம்­பெற்ற குண்­டுத் ­தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களின் நினை­வாக  இரங்கல் திருப்­பலி கொழும்பு கொட்­டாஞ்­சேனை புனித லூசியாஸ் பேரா­ல­யத்தில் நேற்­று­முன்­தினம் சனிக்­கி­ழமை    காலை பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் இடம் பெற்­றது.  

அதில் மறை­யு­ரை­யாற்­றிய கர்­தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மேலும் தெரி­வித்­த­தா­வது, பொறுப்­புக்­களை  அலட்­சியம்  செய்­த­வர்­க­ளுக்கு வழங்­கக்­கூ­டிய தண்­டனை அவர்­களை பதவி நீக்­கு­வ­தே­யாகும். இது­போன்ற பொறுப்­புக்­களை நிறை­வேற்ற முடி­யா­த­வர்கள் நாட்டின் தலை­வர்­க­ளாக இருக்க தகு­தி­யற்­ற­வர்கள் ஆவர்.

தெய்­வத்தின் முன்­னி­லையில்  மண்­டி­யிட்டு வேண்­டுதல் செய்­த­வர்­களை கொடூ­ர­மாக கொலை செய்­த­வர்­க­ளுக்கு இறை­வனின் தண்­டனை நிச்­சயம் உண்டு. புனித அந்­தோ­னி­யாரின் எழில் மிகு ஆல­யத்தை அப்­பாவி மக்­களின் இரத்­தக்­க­றையால் தோய்த்து அந்த புனி­தரை அகௌ­ரவப்படுத்­தி­ய­வர்கள் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்ப முடி­யாது. அவர்­க­ளுக்கு தண்­டனை நிச்­சயம்.  

அதே­வேளை,  ஈஸ்டர் தினத்தில் தெய்­வத்தை தரி­சிக்க சென்­ற­வர்­களை அழித்­தொ­ழிக்கும் சம்­பவம் தொடர்பில் ஏற்­க­னவே  அறிந்­தி­ருந்தும்  அத­னைத் ­த­டுக்­காது புனி­தர்­களை போல் செயற்­ப­டு­ப­வர்கள் மீதும் இறை தண்­டனை உண்டு.  

பொறுப்­பற்ற  விதத்தில்  செயற்­பட்ட  நாட்டின்  தலை­வர்கள்  மற்றும்  அதி­கா­ரிகள் பதவி நீக்­கப்­பட வேண்டும். கொச்­சிக்­கடை  புனித  அந்­தோ­னியார் ஆல­யத்தில் குண்டுத் தாக்­கு­தலில் பலி­யான அனை­வ­ரையும்  நான் அன்­புடன்  நினைவு  கூரு­கின்றேன்.  அவர்­களை இழந்து துய­ருறும் குடும்­பங்­க­ளுக்கு எனது ஆழ்ந்த  அனு­தா­பத்தைத் தெரி­வித்­துக்­கொள்­கிறேன். 

இதே­போன்று இந்த  சம்­ப­வங்­களில் காய­ம­டைந்­த­வர்கள் விரை­வாக  குண­ம­டை­வ­தற்கு எனது ஆசியை வழங்­கு­கின்றேன். இந்த நாட்டில் சமா­தா­ன­மா­கவும் சகோ­த­ரத்­து­வத்­து­டனும் வாழ்ந்த மக்­க­ளுக்கு  ஏன்  இப்­ப­டி­யான துயரம்  நிகழ்ந்­த­தென்று  கேட்க  விரும்­பு­கின்றேன்.  

சம்­பவம் நடந்த தினம்  நான் உட­ன­டி­யாக கொச்­சிக்­கடை  புனித  அந்­தோ­னியார் ஆல­யத்­திற்கு  வந்தேன். எனினும்  பாது­காப்புப் படை­யினர் என்னை உள்ளே செல்ல அனு­ம­திக்­க­வில்லை. அங்கு மேலும் குண்­டுகள் வெடிக்­கலாம் என என்னை  வாக­னத்தில் ஏற்றி அனுப்பிவிட்­டனர். அவ்­வாறு நான் வாக­னத்தில் ஏறி­ய­ பின்பே நீர்­கொ­ழும்பு  கட்­டு­வாப்­பிட்டி  ஆல­யத்­திலும் குண்டு வெடித்­த­தாக எனக்கு தொலை­பேசி அழைப்பு வந்­தது.  நான் அப்­போது அதிர்ச்­சியில் நிலை­குலைந்து  போனேன்.  

அன்று ஈஸ்டர்  தினம் என்­பதால் புனித  அந்­தோ­னியார் ஆல­யத்­திற்கு சென்­ற­வர்கள்  இறை­வனின் மீதும் புனித அந்­தோ­னியார் மீதும் அதீத விசு­வா­சமும் நம்­பிக்­கையும் கொண்­ட­வர்கள். முழந்தாள் படி­யிட்டு இறை­வனை வணங்­கி­ய­வர்கள் தமக்கு  இவ்­வாறு நிகழும் என  ஒரு­போதும்  நினைத்­தி­ருக்க மாட்­டார்கள். 

இது இறை­வனின் விருப்­பத்தில்  இடம்பெற்­ற­தல்ல. மனி­தனின் செயற்­பாட்டால் இடம்பெற்­றது. நான்  இதனை  கேட்­டதும்  தாங்க முடி­யாத துயரில் ஆழ்ந்தேன். ஆல­யத்தில் இறை­வனை வணங்­கப்­போ­ன­வர்­களை இவ்­வாறு கொடூ­ர­மாக  கொலை­ செய்­ததேன்?   இதற்கு  பதில்  கிடைக்­க­வில்லை.  பெற்­றோர்கள்,  குழந்­தைகள் , உற­வி­னர்கள்  என  எதிர்­கா­லத்­தைப்­பற்­றிய  பல்­வேறு  எதிர்­பார்ப்­புக்­க­ளுடன்  வாழ்ந்­த­வர்­களை  கொலை  செய்­த­வர்­க­ளுக்கு  எம்மால்  ஒன்றும்  செய்ய  முடி­யாது. எனினும் இறை­வனின் தண்­டனை நிச்­சயம்  உண்டு.   இந்த  கோர சம்­பவம்  இடம் பெறு­வதை  முன்­னரே   தெரிந்­தி­ருந்­த­வர்கள்  இதற்­கு ­பொறுப்பு  கூற  வேண்டும்.  தெரிந்­தி­ருந்தும்  அலட்­சி­ய­ம் செய்த  தலை­வர்­களும்   அதி­கா­ரி­களும்  இதற்­கு ­பொ­றுப்­புக்­கூ­ற­ வேண்டும்.  இத­னைச்­ சி­றி­ய­தொரு  விட­ய­மா­கக்­க­ருதி  கைக­ழுவி விட  முடி­யாது.  குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளுக்கு  தண்­டனை  கிடைக்க  வேண்டும். அவர்­க­ளுக்கு  நாம்  தண்­டனை  வழங்க  வேண்டும்.  அந்த  தண்­டனை  அவர்­களை  அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்­கு­வதே ஆகும். இதுபோன்ற  பொறுப்­புக்­களை  நிறை­வேற்ற  முடி­யா­த­வர்கள்  நாட்டின்  தலை­வர்­க­ளாக  இருக்க  தகு­தி­யற்­ற­வர்கள்.  அவர்­களை  பத­வி­யி­லி­ருந்து  நீக்க  வேண்டும்.  இது ஒரு வஞ்­ச­க­மான  செயற்­பாடு. இது தவிர்க்­கப்­பட்­டி­ருக்க  வேண்­டி­யது. எனில்,  ஏன்  அதை  அவர்கள்  தடுக்­க­வில்லை  என  கேட்க விரும்­பு­கின்றேன்.

இதைச்­செய்­த­வர்கள்,   அத­னோடு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தாம் எத­னையும்  செய்­யா­த­வர்கள்  போல்  புனி­தர்­க­ளைப்போல் உள்­ளார்கள்.  இந்த பாவச்­செ­ய­லி­லி­ருந்து  தப்­பி­வி­டலாம் என  நினைப்­பது தவறு. அவர்­க­ளுக்கு  இறை­வனின்  தண்­டனை  கிடைப்­பது உறுதி.  

மேலும், ஆலயத்தில் ஓடிய இரத்த ஆறு அன்று கடவுள் முன்னிலையில் காயீன் -ஆபேல் சம்பவத்தில் இறைவன்  முன்னிலையில் சிந்திய இரத்தத்திற்கு சமமாகும்.  இந்த  இரத்தம் இறைவனின் செவிகளில் ஓங்காரமிடும். அவரது தீர்ப்பு  கிடைப்பது உறுதி என அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04