(ஆர்.யசி )
21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவில் இருந்தே அதிகளவில் திட்டங்களை வகுத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வாக்குமூலங்களில் எட்டுப்பேர் தம்மை தற்கொலை தரிகளாக அடையாளப்படுத்தியுள்ளனர் எனவும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர் என்றால் இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு பொய் என்பது உறுதியாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
தேசிய தவ்ஹித் ஜமா அத் அமைப்பு குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தகவல் கிடைத்தது. ஆனால் இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பா என்பதில் எமக்கு கேள்வி இருந்தது. சில இறுக்கமாக கொள்கைகளுடன் அவர்கள் செயற்படுவது மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதேபோல் பாதுகாப்பு சபையில் இந்த விடயம் குறித்து 13 தடவைகள் பேசப்பட்டதாக என்ற எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாம் இந்த விடயங்கள் குறித்து பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்தோம்.
ஆனால் ஆழமாக எந்த விடயங்களும் பேசப்படவில்லை. ஆனால் இந்த தாக்குதல் நடத்தப்பட சகல தரப்பினரதும் பலவீனம் காரணம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் யார் குற்றவாளி என்பதை என்னால் கூற முடியாது. நான் உட்பட பாதுகாப்புபடை பிரதானிகளும் அரசியல் பிரதானிகள் என அனைவரும் இதில் குற்றவாளிகள் தான். அதனை நான் ஏற்றுகொள்கின்றேன்.
21 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்றும் எமக்கு 24 ஆம் திகதி தான் இவற்றை கையாளும் அதிகாரம் வழங்கப்பட்டது. எமது புலனாய்வு தரப்பில் சில குறைபாடுகள் இருந்தது. சிறந்த சில புலனாய்வு அதிகரிகள் கைதுசெய்யப்பட்டமை புலனாய்வு செயற்பாடுகள் குறைக்கப்பட்டமை என்பன சில பின்னடைவுகளை ஏற்படுத்தியது. அதேபோல் இராணுவமாக
எம்மால் சுயாதீனமாக செயற்பட அதிகாரம் இல்லாமையே இதற்கு காரணம். எனினும் 24 ஆம் திகதியில் இருந்து இருவரை இராணுவத்தின் செயற்பாட்டால் தான் குற்றவாளிகளை கைதுசெய்ய முடிந்துள்ளது. இதனை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM