வடமாகாணத்திலுள்ள கைத் தொழிற்சா லைகளை மீள இயங்க வைப்பதற்கு நட வடிக்கை எடுக்கப்படும்.அதற்கமைய முத லில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வணிகத்துறை மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
மேலும் கைத்தொழிற்சாலைகள் அமைக்கப்படும் போது அங்குள்ள பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தில் ஆரம்ப காலத்தில் இயங்கி வந்த கைத்தொழிற்சாலைகளை மீள இயங்க வைப்பது தொடர்பான கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் கைத்தொழில்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக் கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்.
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பித்து வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கம் வடமாகாண அரசாங்கங்களின் சுற்றுச்சூழல் தொடர்பான அறிக்கைகளையும் சமூகம் மற்றும் சூழல் தொடர்பான அறிக்கைகளையும் பெற்ற பின்னரே நடவடிக்கையை மேற்கொள்ளும். இதேவேளை காங்கேசன்துறை தொழிற்சாலை ஆரம்பிக்கும் போது சுண்ணக்கல் அகழ்வு இடம்பெறமாட்டாது. மாறாக பொதியிடல் நடவடிக்கைகளே ஆர ம்பிக்கப்படும்.
தொழிற்சாலைக்கான ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பிப்பதற்கு வடக்கை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் ஆகி யோரின் ஆலோசனைகள் பெறப்பட்ட பின்னரே அமைச்சரவை அனுமதிக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்படும். இங்கு தொழிற்சாலை ஆரம்பிக்கும் போது அப்பிரதேச மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அடுத்ததாக அடுத்த கட்ட பிரதேசம் என படிப்படியாகவே முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இத்திட்டங் கள் மேற்கொள்ளப்படும்போது முதலீட்டிற்கான வாய்ப்புக்கள் அதிரிக்கும். இதற்கும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்ப டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆரம்ப காலத்தில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் மீள இயங்க வைக்கப்படும்போது தொழிற்சாலை எங்கு இயங்குகின்றதோ அப் பகுதியை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கே வேலை வாய்ப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஆரம்பத்தில் இயங்கியிருந்தவேளை சுண்ணக்கல் அகழ்வுகளால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்களை சீர்செய்யும் முகமாக சுற்றாடல் அமைச்சால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டத்திற்கு எமது அமைச்சும் உதவிகளை வழங்கும் என்றார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சரவணபவன், அங்கஜன் இராம நாதன் மற்றும் வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், வட மாகாண அமைச்சர்களான ஐங்கர நேசன், குருகுலராஜா, ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM