(எம்.எப்.எம்.பஸீர்)
சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான, குண்டு தயாரிக்கப்பட்ட நிறுவனம் என சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டி செப்பு நிறுவனத்தில் சேவையாற்றிய 9 பேருக்கு பிணை கிடைத்த விவகாரம் தொடர்பில் சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உள்ளிட்ட மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகளை எஸ்.ஐ.யூ. எனப்படும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு விசாரணை செய்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் உதய ஹேமந்த, வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் விதுர ஜயசிங்க, வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பியல் குணதிலக ஆகியோரிடமே எஸ். ஐ.யூ. இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
ஒவ்வொருவரிடமும் தலா 8 மணி நேரங்கள் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மெவன் டி சில்வாவின் நேரடி கட்டுப்படடில் இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM