தற்கொலை குண்டுத் தாக்குதல்தாரியான சஹ்ரான் ஹாசிமின் மகளின் இரத்தமாதிரியைப் பெற்று மரபணுபரிசோதனையை மேற்கொள்ள குற்றத் தடுப்பு பிரிவினருக்கு நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று ஷங்கரில்லா நட்சத்திர ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களில் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமும் ஒருவர் என்றும் அவர் அந்த தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
எனினும் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர் அவர் இல்லையென புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருந்தன. இதனை உறுதி செய்வதற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் சகோதரியின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினர் தீர்மானித்திருந்தனர். அவரை கொழும்பிற்கு அழைத்து வரவும் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியிருந்தது.
இவ்வாறான நிலையில் சாய்ந்தமருது தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சஹ்ரானின் மகளின் இரத்த மாதிரியை பெற்று மரபணு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்து.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM