ஊடகவியலாளருக்கு இடையூறு விளைவிப்பு
நுவரெலியா நகரில் இயங்கிவரும் மகளிர் பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோருக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலைக்கு வெளியில் வீதியில் நடத்தப்பட்டது.
நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் பெற்றோரை அழைத்து பாதுகாப்பற்ற நிலையில் நடத்தப்பட்ட கூட்டம் தொடர்பில் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்தின்மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
விடயம் அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாடசாலை அதிபர் நடந்துகொண்ட அதேவேளை அதிபரால் தூண்டிவிடப்பட்ட சிலர் ஊடகவியலாளரை தாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதையறிந்து குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள தேவாலயம் ஒன்றின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விரைந்து வந்து நிலைமைகளை விசாரித்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM