அவுஸ்திரேலியாவின் அனைத்து 50 டொலர் நாணயத்தாள்களிலும் ஒரு வார்த்தையொன்று தவறுதலாக அச்சிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் 50 டொலர் நாணயத்தாளில் ‘ரெஸ்பொன்ஸிபிலிட்டி’ (responsibility) என்ற வார்த்தை தவறுதலாக ‘ரெஸ்பொன்ஸிபில்டி’ (responsibilty) என்று அச்சிடப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான மக்கள் குறித்த நாணயத்தாள்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இத்தனை நாட்கள் யாரும் பிழையை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் ஒருவர் அதிலிருக்கும் பிழையை கண்டறிந்துள்ளார்.
அத்துடன் குறித்த நபர் இன்ஸ்டகிராமில் அதனை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இது அவுஸ்திரேலிய ரிசர்வ் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையில், குறித்த நாணயத்தாளில் பிழை இருப்பது உண்மை தான் என ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டில் மட்டும் 227 மில்லியன் டொலர் அச்சிடப்பட்டதாகவும், அதில் 184 மில்லியன் 50 டொலர் நாணயத்தாள்கள் என்றும் குறித்த வங்கி தெரிவித்துள்ளது.
அடுத்த முறை அச்சிடும் போது பிழை திருத்தப்படும் என்று அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM