மன்னார் பெரியகமம் பகுதியில் வளவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த இரட்டையர்களில் ஒரு சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த றொசான் பர்ணாந்து என்ற குடும்பஸ்தர் தனது குடும்பத்தாருடன் மன்னார் பெரியகமம் பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று சில தினங்கள் தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் குறித்த குடும்பஸ்தரின் இரட்டைப் பிள்ளைகள் அயல் வீட்டு வளவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது இரண்டு பிள்ளைகளில் ஒரு சிறுவனை காணவில்லையென தேடியுள்ளனர். இதன்போது குறித்த சிறுவன் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வளவுக்குள் இருந்த கிணற்றுக்கட்டு சிறியதாக இருந்தமையாலேயே குறித்த சிறுவன் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சிறுவனின் மரணம் தொடர்பான விசாரனையை மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்கொண்டதுடன் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து சிறுவனின் சடலம் இன்று புதன் கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM